Friday, 30 June 2017

கதிராமங்கலம் போலீஸ் தடியடி எஸ்டிபிஐ கடும் கண்டனம்

கதிராமங்கலம் விளைநிலத்தில் ஓ.என்.ஜி.சியின் எண்ணெய் குழாயில் கசிவு, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல்துறை தடியடி - எஸ்.டி.பி.ஐ. கடும் கண்டனம்.
**********************
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தஞ்சை மாவட்டம் குத்தாலம் கதிராமங்கலத்தில் விளைநிலங்களுக்கு இடையே ஓ.என்.ஜி.சி., நிறுவனம் அமைத்துள்ள எண்ணெய்க் கிணறுகளின் பைப் லைன்களில் உடைப்பு ஏற்பட்டு எண்ணெய் கசிவு ஏற்பட்டது. கச்சா எண்ணெய் கொப்பளித்து விளைநிலங்களில் பரவிவருவதால் மக்கள் பெரும் அச்சமைடைந்துள்ளனர். இதனால் விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் தீப்பிடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டி இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் நேரில் வருகை தந்து ஓ.என்.ஜி.சி. அப்பகுதியிலிருந்து அகற்றப்படும் எனவும் மக்களின் உயிருக்கு பாதுக்காப்பு அளிக்கப்படும் என்று உறுதி அளிக்கும் வரை மக்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கைக்கு எவ்வித மதிப்பும் அளிக்காமல் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் போராட்டக்களத்தில் அதிரடியாக புகுந்து தடியடி நடத்தியுள்ளனர். பெண்கள் என்றும் பாராமல் கை கால் முறியும் அளவுக்கு காவல்துறை கொடூரமான தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பொதுமக்களும், விவசாயிகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில், காவிரி டெல்டாவையே மலடாக்கும் வகையில் காவல்துறை பலப்பிரயோகத்துடன் இதுபோன்ற திட்டங்கள் அங்கு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கதிராமங்கலத்தில் காவல்துறை மேற்கொண்டுவரும் அடக்குமுறைகளுக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும். கதிராமங்கலத்திலிருந்து ஓ.என்.ஜி.சி வெளியேற வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் செவிமடுக்க வேண்டும். தமிழக அரசு மவுனம் காக்காமல் காவிரி டெல்டாவை பாதுகாக்க உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், கதிராமங்கலத்தில் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்

Thursday, 29 June 2017

தமிழ்நாடு பேரூராட்சி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு தமிழ்நாடு பேரூராட்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஊழியா்கள்

நெல்லை-
நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு தமிழ்நாடு பேரூராட்சி 
அனைத்து சங்கங்களின்  கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது. 
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமரேசன் தலைமை தாங்கினார்.
மாவட்ட பொருளாளர் கந்தசாமி வரவேற்றார். பொறியாளர் சங்கம் 
மாநில தலைவர் ஜனார்தன பிரபு, ஊழியர் சங்கம் மாவட்ட செயலாளர் 
அல்லாபிச்சை, பணியாளர் சங்கம் மாவட்ட செயலாளர் முருகன் ஆகியோர்
முன்னிலை வகித்தனர். 
செயல் அலுவலர் சங்கம் மாவட்ட தலைவர் முத்துக்குமார் துவக்க 
உரையாற்றினார். பணியாளர் சங்கம் தூத்துக்குடி மாவட்ட தலைவர் 
வேலுச்சாமி, சிறப்புரையாற்றினார். பணியாளர் சங்கம் மாநில செயலாளர் 
தர்மர் சிறப்புரையாற்றினார். தொழில்நுட்ப பணியாளர் சங்கம் நெல்லை
மாவட்ட தலைவர் சம்சுகனி, துப்புரவு மேற்பார்;வையாளர் சிவகரி
மாடசாமி, கணினி இயக்குபவர் சங்கம் மாவட்ட செயலாளர் 
முத்துகிருஷ்ணன் துப்புரவு பணியாளர் சங்கம் மாவட்ட தலைவர்
சந்திரசேகர் வாழ்த்துரை வழங்கினர். பேரூராட்சி பணியாளர் சங்கம்
மாநில பொருளாளர் நாமதுரை நிறைவுரையாற்றினார். 
செயல் அலுவலர் சங்கம் மாவட்ட செயலாளர் பாபு நன்றி கூறினார்.

தகுதி வாய்ந்த கிராம ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் 
உயர்த்துதல், அனைத்து நிலைகளிலும் காலிப்பணியிடங்களை 
பதவி உயர்வு மூலம் நிரப்புதல் உள்பட 20 அம்ச கோரிக்கைகளை 
வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.  
மேலும் புதிய தகவல்களை அறிந்து கொள்ள
 நெல்லை நியூஸ் போஸ்ட் யூ டியூப் சேனலி்ல்
 இணைந்து பயன் பெறுங்கள்- நன்றி 
www.youtube.com/user/
nellainewspost
இது நம்ம சேனல் 


Wednesday, 28 June 2017

குருவிகுளத்தில் ஆசிரியர்கள் போராட்டம்

குருவிகுளம் உ.தொ.க.அலுவலகத்தில் சுமார் 15 ஆண்டுகளாக இளநிலை உதவியாளராக பணிபுரிந்து கொண்டு தொடர்ந்து ஆசிரியர் விரோதம் மற்றும் இயக்க விரோத போக்கை கடைபிடித்து வந்த அலுவலக இளநிலை உதவியாளர் இன்று *தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நடத்திய காத்திருப்பு போராட்டத்தின்* மூலம் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

*குருவி குளம் சரகத்தில் 120 பெண்ணாசிரியர்கள் உள்பட 180 ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்*.

நெல்லையில் எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் பேட்டி

*பத்திரிக்கையாளர் சந்திப்பு*

*_நெல்லையில் இன்று (28/06/2017) எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி கூறியதாவது;_*

1. நெல்லை மாவட்டத்தில் பள்ளிவாசல்களில் பாங்கு சொல்வதற்காக கூம்புவடிவ ஒலிபெருக்கி பயன்படுத்த காவல்துறை இடையூறு அளித்து வருவதாக புகார்கள் வருகின்றன. நாள் ஒன்றுக்கு 5 வேளைகளில் 2 நிமிட அளவில் ஒருநாளைக்கு வெறும் 10 நிமிடங்கள் அளவுக்கே பள்ளிவாசல்களில் பாங்கு சொல்வதற்காக கூம்புவடிவ ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதுவும் அனுமதிக்கப்பட்ட அளவான 70 டெசிபல் அளவுக்கே பயன்படுத்தப்படுகின்றன. கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்துவது தொடர்பான அரசின் வழிகாட்டுதல்களும் இந்த நிபந்தனைகளை தான் வலியுறுத்துகின்றன. ஆனால், காவல்துறை இதை எதையுமே கணக்கில் கொள்ளாமல் பள்ளிவாசல்களில் கூம்புவடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடாது என நெருக்கடி அளிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல.

பொதுவாக விதிமீறல்கள் தொடர்பாக உயர் நீதிமன்றம் ஏராளமான விசயங்களில் உத்தரவுகளையும், வழிகாட்டுதல்களையும், விதிமுறைகளையும் அளித்துள்ளது. விதிமீறல் கட்டிடங்கள், அனுமதி இல்லாத கட்டிடங்கள் போன்றவற்றை இடிக்க வேண்டும் என பல்வேறு தருணங்களில் உத்தரவிட்டுள்ளது. இதனை செயல்படுத்த முனைப்புக்காட்டாத காவல்துறையும், வருவாய் துறையும் பள்ளிவாசல் விசயங்களில் தீவிரம் காட்டுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. அரசியல் கட்சிகளின் கூட்டங்களிலோ மற்ற சமூகத்தினரின் விழாக்களிலோ அனுமதிக்கப்பட்ட ஒலி அளவைத் தாண்டி ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுவதை காவல்துறையோ, வருவாய்த்துறையோ கண்டுகொள்ளாமல் இருக்கும் அதே நேரத்தில், அனுமதிக்கப்பட்ட ஒலி அளவில் கூம்புவடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்தப்படுவதற்கு அனுமதி மறுப்பது என்பது வழிபாட்டு உரிமையை முஸ்லிம்களுக்கு மறுக்கும் நடவடிக்கையாகவே பார்க்க முடிகிறது. ஆகவே, பள்ளிவாசல்களில் வழிபாடுகளில் இடையூறு இல்லாமல் காவல்துறை துணை நிற்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

2. சில தினங்களுக்கு முன்னர் ராமநாதபுரத்தில் அஸ்வின் குமார் என்ற பாஜக பிரமுகரும் அவருடைய தந்தையும் சிலரால் தாக்கப்பட்டதாகவும், தாக்கியவர்கள் இஸ்லாமியர்கள் என்றும் முகநூலில் பத்வா கொடுத்து அறிவித்துவிட்டு தாக்கினார்கள், தாக்கியவர்கள் தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் என்றெல்லாம் பிரச்சாரத்தை பாஜக தலைவர்கள் கட்டவிழ்த்து விட்டார்கள். இந்த பொய்யான அவதூறு செய்திகளை பரப்பி பொது அமைதியை கெடுக்கும் வகையில் பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை செளந்தராஜன், பாஜக மாநில செயலாளர் ராகவன், பாஜகவின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் முரளிதரராவ், பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உள்பட பாஜகவின் தேசிய, மாநில தலைவர்கள் ஈடுபட்டனர். இந்த அவதூறு மூலம் மாநிலம் முழுவதும் ஒரு பதட்டமான சூழலை உருவாக்க அவர்கள் முயற்சி மேற்கொண்டார்கள்.

ஆனால், இந்த வழக்கில் அதே சமூகத்தை சார்ந்த, அதே ஜாதியை சார்ந்த 15 நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. ஆனால் உண்மை இப்படியிருக்க இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்த பாஜக தலைவர்கள் இப்போது என்ன செய்யப்போகிறார்கள்? அவர்கள் பரப்பிய அவதூறுக்கு பிராயச்சித்தம் என்ன? அவர்கள் உருவாக்கிய பதட்டத்திற்கு பதில் என்ன? பொது அமைதிக்கு மிகப்பெரிய அளவில் பங்கம் விளைவிக்கிற வகையில் வன்முறையை தூண்டும் வகையில் இத்தகைய கருத்துக்களை பதிவு செய்த பாஜக தலைவர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறேன்.

தொடர்ச்சியாகவே இதுபோன்ற விசயங்களில் பாஜக தலைவர்கள் அவதூறுகளை பரப்பி தமிழகத்தில் பதட்டத்தை உருவாக்க முனைந்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருப்பூரில் நடந்த ஒரு தற்கொலையை இஸ்லாமியர்கள் செய்த கொலையாக அவதூறு பரப்பினார்கள் இதே தலைவர்கள். பிறகு அது தற்கொலை என காவல்துறை விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இப்படி உண்மைக்கு மாறாக பொய்யை பரப்பக்கூடிய பாஜக தலைவர்களை பொய்யர்கள் என்று நாம் குற்றம் சாட்டுகிறோம். இந்த பொய்யர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

3. அதிமுகவின் மூன்று அணிகளும் குடியரசுத்தலைவர் தேர்தலில் பாஜகவை ஆதரித்ததன் மூலம் மிகப்பெரிய வரலாற்றுத் தவறை செய்திருக்கிறார்கள். அதிமுகவை பிளவுபடுத்திய, அதிமுகவை துண்டாடிய பாஜகவுக்கு எதிராக அதிமுக களமாடியிருந்தால் தமிழக மக்களிடம் அவர்களின் செல்வாக்கு உயர்ந்திருக்கும். ஆட்சியை இழந்திருந்தாலும் கட்சியை காப்பாற்றுவதற்கும், வலிமையான சக்தியாக மாறுவதற்கும் அது வாய்ப்பை உருவாக்கியிருக்கும். ஆனால், பாஜகவிடம் இப்போது மண்டியிட்டதன் மூலமாக தமிழக மக்களிடம் இருந்த செல்வாக்கையும் அதிமுக இழக்கக்கூடிய சூழலை உருவாக்கியிருக்கிறது. அதிமுக தலைவர்கள் மீதான நம்பிக்கையையும் இழக்கச் செய்திருக்கிறது.

4. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக வரும் ஜூலை 21 அன்று சென்னையில் முப்பெரும் விழா நடைபெறவிருக்கிறது. கட்சியின் 9ம் ஆண்டு துவக்கவிழா, பெருநாள் சந்திப்பு மற்றும் விருதுகள் வழங்கும் விழா ஆகியன நடைபெறவிருக்கிறது. இந்த விழாவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். அந்நிகழ்ச்சியில் சமூகத்தில் பல்வேறு தளங்களில் மக்களுக்கு சேவையாற்றக்கூடிய சாதனையாளர்களை தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன.

சிறந்த பொதுநல தொண்டுக்காக காயிதேமில்லத் விருதும், சிறந்த மனித உரிமை களப்பணிக்காக தந்தை பெரியார் விருதும், ஒடுக்கப்பட்டோர் நலன் உழைப்பிற்காக டாக்டர் அம்பேத்கர் விருதும், சிறந்த கல்விச் சேவைக்காக காமராசர் விருதும், தமிழ் இலக்கியம் மற்றும் சிறந்த எழுத்து ஆளுமைக்காக கவிக்கோ விருதும், சிறந்த சுற்றுச்சூழல் செயல்பாட்டிற்காக நம்மாழ்வார் விருதும், சிறந்த சமூக சேவைக்காக அன்னை தெரசா விருதும் வழங்கவிருக்கிறோம். அதுமட்டுமல்லாமல் பல்வேறு சாதனையாளர்களை கவுரவிக்கவும் இருக்கிறோம். என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத் தலைவர் நெல்லை முபாரக், மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன், நெல்லை கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.ஏ.கரீம், மாவட்ட துணைத் தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி, செயலாளர் ஹயாத் முகமது, எஸ்.டி.டி.யூ. மாவட்ட தலைவர் ஹைதர் அலி ஆகியோர் உடனிருந்தனர்.

Tuesday, 27 June 2017

நெல்லை மாநகர் போலீஸ் துணை கமிஷனர் பொறுப்பேற்றார்.

நெல்லை மாநகர் போலீஸ் துணை கமிஷனர் பெரோஸ்கான்  அப்துல்லா


நெல்லை மாநகர் போலீஸ் துணை கமிஷனர் பெரோஸ்கான்  அப்துல்லா
சிறப்பாக பணியாற்றிய காவலா்களுக்கு சான்றிதழ் வழங்கியபோது எடுத்தப்டம். 


நெல்லை மாநகர் போலீஸ் துணை கமிஷனர் பெரோஸ்கான்
  அப்துல்லா இன்று பொறுப்பேற்றார்.
மதுரை குற்றப்பிரிவு துணை கமிஷனராக இருந்த பெரோஸ்கான்
 அப்துல்லா  நெல்லை துணை கமிஷனராக நியமிக்கப் பட் டார்.
 இந்த நிலையில் இன்று அவா் பொறுப்பேற்றுக்கொண்டாா்.
இவர் 2002ம் ஆண்டு குரூப்1 தேர்வு எழுதி தேர்வாகி கடலூரில்
 டிஎஸ். பியாக பணியாற்றினார். பின்னர் திருச்சியில் கூடு தல்
 எஸ் பி யாக பணியாற் றி னார். 2013ல் பதவி உயர்வு பெற்று
மதுரையில் குற்றப்பிரிவு துணை  கமிஷனராக பொறுப்பேற்றார்.
தொடர்ந்து சென்னை அண்ணாநகரில் பணியாற்றினார்.
 தற்போது நெல்லையில் பொறுப்பேற்றுள்ளார்.
புதியதாக பொறுப்பேற்றுள்ள  மாநகர் போலீஸ் துணை கமிஷனருக்கு  காவல்துறை அதிகாாிகள் அலுவலா்கள் நெல்லை மாவட்ட
செய்தியாளா்கள்  வாழ்த்துக்களை தொிவித்தனா்.

Monday, 26 June 2017

கரீம் நகரில் பெருநாள் சிறப்பு தொழுகை


மஸ்ஜித்துல் ஹுதா சார்பாக பெருநாள் சிறப்பு தொழுகை



மேலப்பாளையம் விரிவாக்க பகுதியான கரீம் நகர் மஸ்ஜிதுல் ஹுதா ஜமாத் சார்பாக ஈத் (ரமலான்) பெருநாள் திடல் தொழுகை கரீம் நகர் திடலில் நடைபெற்றது

சிறப்பு தொழுகையை இர்பானூல் ஹீதா மகளிர் அரபி கல்லூரி பேராசிரியர் மவ்லவி மீரான் முகைதீன் அன்வாரி தொழுகை நடத்தினார்

பெருநாள் சிறப்பு குத்பா பேருரை மஸ்ஜிதுல் ஹுதா தலைவர் மவ்லவி K.S சாகுல் ஹமீது உஸ்மானி அவர்கள் நிகழ்த்தினார்கள்

அவர் தனது உரையில் அன்பும்  அமைதியும் உலகில் தழைக்க இன்றைய தினம் பிராத்திக்கப்படுகிறது

இந்த பெருநாளின் சிறப்பம்சமே ஏழ்மையும் வறுமையும் மனித குலத்தில் இருந்தே விரட்டபட வேண்டும் என்பதே முஸ்லிம்களின் கடமை

பெருநாள் தொழுகை திடலுக்கு வரும்முன் கஷ்டபடுகின்ற மக்களுக்கு தானியங்கள், உதவிகள் (பித்ரா) வழங்கிட வேண்டும் என்றே இஸ்லாம் வலியுறுத்துகிறது

அதையே முஸ்லிம்களும் பின்பற்றுகின்றனர்
என்றார்

சிறப்பு தொழுகையில் பள்ளிவாசல் கமிட்டி உறுப்பினர் கள்,ஜாபர் அலி உஸ்மானி, ஜவஹர்,பிஸ்மி நவ்ஷாத்,மற்றும் SDPI கட்சியின் மாநில துணைத்தலைவர் நெல்லை முபாரக் ,மாவட்ட பொதுச்செயலாளர் s.s அப்துல் கரீம்,முகம்மது லெப்பை,கல்வத்,பஷீர்,இத்ரீஸ் பாதுஷா,இசாக்,சேக்.,மீரான்,சுல்தான் பாதுஷா,கரீம் நகர் ,தாய் நகர்,முகம்மது நகர் ஜமாத்தார்கள் ,பெண்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்


Sunday, 25 June 2017

இந்திய ஆசிரியர் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம்

*இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் நெல்லை மாவட்ட விரிவடைந்த பொதுக்குழு  கூட்டம் இன்று ஞாயிறு 25.06.2017  வீரமாணிக்க புரம் நவஜுவன் டிரஸ்டில் வைத்து மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது*.


*TNPTF மாவட்ட செயலாளரும் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான செ.பால்ராஜ் தலைமை வகித்தார்*.

*STFI ன் மாநில பொறுப்பாளரும் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளருமான எட்வின் பிரகாஷ் வாழ்த்துரை வழங்கினார்*.

*8 சங்கங்களைச் சார்ந்த மாவட்ட பொறுப்பாளர்கள் கருத்துரை வழங்கினார்கள்*.

*5அம்ச கோரிக்கையை வழியுறுத்தி ஜுலை -10 முதல் ஜீலை -21 வரை ஆசிரியர் சந்திப்பு இயக்கம் நடத்துவது எனவும் ஜீலை -22 அன்று மாலை 4.30 மணிக்கு மாவட்ட தலைநகரத்தில் ஆர்பாட்டம் நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது*.

*TNPTF. மாநில செயற்குழு உறுப்பினர் மு.முத்தானந்தம் தேவதாஸ் நன்றி கூறினார்.*


               

பாளையில் அதிமுக சாா்பில் பித்ரா அாிசி வழங்கப்பட்டது



புனித ரமலான் பண்டிகையையொட்டி பாளையில் அதிமுக சாா்பில் பித்ரா அாிசி வழங்கப்பட்டது.

 ரம்ஜான் பண்டிகையையொட்டி பாளையில் அதிமுக சார்பில்  மத்திய தொலைத்தொடர்பு ஆலோசனைக்குழு உறுப்பினர் அசன் ஜாபர் அலி ஏற்பாட்டில் பித்ரா அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாராளுமன்ற மேலவை உறுப்பினர் விஜிலா சந்தியானந்த், மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா, கழக அமைப்பு செயலாளர் சுதா கே பரமசிவன்,   பரணி சங்கரலிங்கம், ஆகியோர் வழங்கினர். விழாவில அதிமுக நிர்வாகிகள்சி.பா, முருகன், ஜெரால்ட், சின்னதுரை, தாழை மீரான், விவேகானந்தன், பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

ரம்ஜான் பண்டிகையையொட்டி TMJK அாிசி உணவு பொருட்கள வழங்கினா்

ரம்ஜான் பண்டிகைக்காக தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சாா்பில் பித்ரா  வழங்கும் நிகழ்ச்சி 

ரம்ஜான் பண்டிகைக்காக தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சாா்பில் பித்ரா  வழங்கும் நிகழ்ச்சி யில் பங்கேற்ற கட்சியினா். 

ரம்ஜான் பண்டிகையையொட்டி தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் அரிசி மற்றும் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி பாளையங்கோட்டையில் நடைபெற்றது.
    பாளை பகுதி தலைவர் ரஹ்மான் தலைமை தாங்கினார். பகுதி பொருளாளர் சேக்முகமது, இளைஞரணி ரஹ்மத்துல்லா, மாநகர செயலாளர் சேக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 100க்கு மேற்பட்ட ஏழைக்குடும்பங்களுக்கு அரிசி மற்றும் உணவு பொருட்களை வழங்கினார்.
     மாவட்ட பொருளாளர் சாந்தி ஜாபர், மாவட்ட இளைஞரணி செயலாளர் லெனின், மாவட்ட செய்தி தொடர்பாளார் ஜமால், மாவட்ட மீனவரணி தமாஸ், மேலப்பாளையம் பகுதி நிர்வாகிகள் சரீப் அலி, நயினார், ஜின்னா உள்பட பலர் கலந்து கொண்டனர். பாளை பகுதி செயலாளர் ரபீக் நன்றி கூறினார்.

Friday, 23 June 2017

நெல்லையில் தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்


     நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் திரிபுரசெல்வம் தலைமை தாங்கினார். 2012ம் ஆண்டு பணி நியமனம் செய்த 16 ஆயிரத்து 539 பகுதிநேர  சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஊதிய உயர்வு மற்றும் நிலுவைத்தொகை வழங்கவேண்டும் என்பது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

நெல்லையில் அதிமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு கருத்தரங்கம்


நெல்லையில் அதிமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு சார்பில்
மாவட்ட அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது. தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ் சத்தியன் தலைமை தாங்கினார். இணை செயலாளர் சண்முகவேல்  காளிதாஸ், பிரசன்னா அழகர்சாமி, மணிகண்டன் மாநகர் மாவட்ட செயலாளர் எம்.சி.ராஜன், புறநகர் மாவட்ட செயலாளர் சாந்தசீலன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சீனிராஜ் மற்றும் திருநெல்வேலி மாநகர் புறநகர், தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்ட தகவல தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் செயல்வீரர்கள் சமூக வலைதள செயல்பாட்டாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வடகரையில் திமுக சார்பில் மதியஉணவு


வடகரை  அன்பு  இல்லத்தில்  தலைவர்  கலைஞர்  அவர்களின்  பிறந்த நாளை  முன்னிட்டு  முதியோர்  மற்றும்  மனவளர்ச்சி  குன்றியோருக்கு  மதிய உணவுகள்  வழங்கும்   நிகழ்ச்சி  நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு  மாநில மாணவரணி துணை செயலாளர் ஷெரீப்  தலைமை தாங்கினார்.   மாவட்ட  மாணவரணி  துணை அமைப்பாளர்  வக்கீல்  ராஜா,ஜெகதீஸ்  செங்கோட்டை  மாணவரணி  அமைப்பாளர்  இம்ரான்  முன்னிலை  வகித்தனர்.  பண்பொழி  முன்னாள்  தலைவர் மாவட்ட பிரதிநிதி  மங்களவிநாயகம்  வரவேற்றார். வடகரை முன்னாள்  பேரூராட்சித் தலைவர்  அஜிஸ்  முத்துமீரான்  தொகுத்து  வழங்கினார். மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன்  முதியோர்களுக்கு  அறுசுவை  உணவுகள்  வழங்கினார்.  நிகழ்ச்சியில்  முன்னாள்  சட்டமன்ற  உறுப்பினர்  ரசாக்  மாவட்ட  அவைத்தலைவர்  முத்துப்பாண்டி   ஒன்றிய செயலாளர்கள்  செல்லத்துரை  ஆ.ரவிசங்கர்  வே.ஜெயபாலன் மாவட்ட  விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர்  கோமதிநாயகம்  மாவட்ட  தொண்டர் அணி அமைப்பாளர்  இசக்கிப்பாண்டியன்  அணி துணை அமைப்பாளர்கள் வளன்அரசு  யோவான்  கிட்டுப்பாண்டியன்  கோ.சாமித்துரை  சண்முகநாதன் அந்தோணி, அற்புதராஜ்    ராமராஜன்  ஒன்றிய இளைஞரணி அழகுசுந்தரம்    தொண்டர் அணி  பரமசிவம்   கீழப்பாவூர்  பேரூர் கழக செயலாளர்  ஜெகதீசன் குற்றாலம்  பேரூர் கழக செயலாளர்  மந்திரம்  புதூர்  மதியழகன்  அச்சன்புதூர்  வெள்ளத்துரை  மாவட்ட பிரதிநிதி  முதலியான்கான் சாகுல்ஹமீது ரெசவுமைதீன் அபுல்ஹசன் இளைஞரணி ஐயப்பன் இசக்கித்துரை  முகம்மது இஸ்மாயில்  ராஜேந்திரன்  மீரான்உசேன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்  முடிவில் மாவட்ட  இலக்கிய  அணி பொருளாளர்  கனல்காஜா நன்றி கூறினார்.

Thursday, 22 June 2017

நெல்லை ஊரக வளா்ச்சி துறை அலுவலா்கள் உண்ணாவிரதம்

     நெல்லையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சண்முக சுந்தரம் தலைமை தாங்கினார். துணை தலைவர் ராஜசேகர் வரவேற்றார்.  மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், எல்ஐசி கோட்ட பொதுச்செயலாளர் முத்துக்குமாரசாமி உரையாற்றினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாநில துணை தலைவர் குமாரவேல் சிறப்புரையாற்றினார். சுமதி நிறைவுரையாற்றினார். மாவட்ட இணை செயலாளர் பழனி நன்றி கூறினார்.
   ஊராட்சி செயலாளர்களுக்கு சிறப்பு நிலை ;தேர்வு நிலை  மற்றும் கூடுதல் பொறுப்பு படி  பெற்றிட, ஊராட்சி செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளருக்கு இணையான ஊதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

நெல்லையில் கட்டுமான பொறியாளா் கூட்டமைப்பு கோாிக்கை ஆா்ப்பாட்டம்



       பாளை ஜவஹர்திடலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டிட பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க தலைவர்கள் செய்யது முகமது புகாரி;. தில்லை நடராஜன் ஆகியோர்  தலைமை தாங்கினர்.
 சொக்கநாதன், இசக்கியப்பன், பஷீர் அகமது, முத்துக்குமார், மன்மதன், முத்துமாரியப்பன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
       நீர் வளஆதாரத்தை பாதுகாத்திட ஆற்று மணலுக்கு பதிலாக செயற்கை மணல் மட்டுமே பயன்படுத்திட அரசு ஆணையிட்டு மாற்றுமணல் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும். கட்டுமான பொருட்களை அத்தியாவசிய விலைப்பட்டியலில் கொண்டு வந்து அரசு விலை நிர்ணயம் செய்யவேண்டும் என்பது உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Wednesday, 21 June 2017

Indian Bank - ஆலங்குளம் இந்தியன் வங்கி கிளை விழா





Indian Bank  - ஆலங்குளம் இந்தியன் வங்கி கிளை விழா
ஆலங்குளம்-
     இந்தியன் வங்கி ஆலங்குளம் கிளை தென்காசி மெயின்ரோடு போஸ்ட் ஆபீஸ் எதிரே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய கட்டிடத்தில் வங்கி செயல்பாடு தொடக்க விழா, ஏடிஎம் மையம் தொடக்க விழா நடைபெற்றது.
    நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திறந்து வைத்தார். விழாவில் இந்தியன் வங்கி பொதுமேலாளர் நாகராஜ், திருநெல்வேலி மண்டல மேலாளர் ராதாகிருஷ்ணன், கட்டிட உரிமையாளர் கணேசன், கதிர்வேல் கணேசன், மற்றும் டிபிவி மல்டிபிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர் வைகுண்டராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். செய்துங்கநல்லூர் கிளை மேலாளர் ஞானசுந்தரி வரவேற்றார்.
   விழாவில் வாகன கடன், மகளிர் சுயஉதவிக்குழுவிற்கான கடன், சிறுதொழில் கடன், விவசாய கடன் உள்பட 115 பயனாளிகளுக்கு ரூபாய் 5.42 கோடி மதிப்பில் கடன் தொகைக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
ஆலங்குளம் கிளை மேலாளர் கனகசெல்வன் நன்றி கூறினார்.  

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சர்வேதேச யோகா தினம்




மனோன்மணியம் சுந்தரனார் 
பல்கலைக்கழகத்தில்   சர்வேதேச
 யோகா தினம் கொண்டாடப்பட்டது. 
     சா்வதேச யோகாதினத்தையொட்டி
 நெல்லை மனோன்மணியம்
 சுந்தரனாா்  பல்கலைக்கழக
வளாகத்தில்  உள்ள விளையாட்டு 
மைதானத்தில் யோகா
 செய்முறை பயிற்சி நடைபெற்றது. 
இந் நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக
  துணைவேந்தர்  பாஸ்கர்  தலைமை
 தாங்கி சிறப்புரையாற்றினாா்.
     அப்போது அவா் கூறுகையில்
 யோகா பயிற்சி மேற்கொள்ளும் 
போது  நமது  உடல்நலம், மனநலம் 
மேலும்  நோய் நொடியில்லா 
ஆரோக்கியமான  வாழ்க்கை வாழ 
முக்கிய பங்கு வகிக்கிறது
 என்று கூறினாா். 
      சிறப்பு விருந்தினராக உலக
 சமுதாய  சேவா சங்கத்தின்
 திருநெல்வேலி  மண்டல
 துணைத்தலைவர் சந்திரசேகரன் 
கலந்து கொண்டு யோகாவின் 
வரலாறுகள், யோகாவின் நோய்
 தீர்க்கும்  பயன்கள் பற்றியும்
 எடுத்துச்  சொல்லி அதற்கு தற்போது 
கிடைத்த  அங்கீகாரத்தைப் பற்றியும் 
எடுத்துரைத்தார். 
 பல்கலைக்கழகப் பதிவாளர் 
ஜான்.டி.பிரிட்டோ
  சிறப்புரையாற்றினாா்
 மேலும் யோகா செய்முறை
 பயிற்சியில்
 கலந்து கொண்டார்.  பல்கலைக்கழக 
இளைஞர் நலத்துறை இயக்குநர்  
.வெள்ளியப்பன்  வரவேற்றாா். 
       ஆட்சிக்குழு உறுப்பினர்கள், 
பல்கலைக்கழகத்தின் பேராசியர்கள்,
 பல்கலைக்கழக அலுவலர்கள், 
பல்கலைக்கழக மாணவர்கள்,
 DDCE B.Ed  மாணவர்கள், ரோஸ் மேரி, 
ராணி அண்ணா, சராஹ் டக்கர், 
தூய சேவியர்ஸ்  மற்றும் ம.தி.தா 
இந்து கல்லூரிகளின்  மாணவ 
மாணவியர்கள் உட்பட 
300க்கும் மேற்ப்பட்ட பலர் 
கலந்துகொண்டார்கள். 
கல்வியல் துறைத்தலைவர் வில்லியம்
 தர்மராஜா, நாட்டு நலப்பணித்திட்ட
 இயக்குநர் .ராஜலிங்கம், .ரமேஷ் ஆகியோா்   
இந்நிகழ்ச்சியிணை ஒருங்கினைத்தனா். 
விளையாட்டு இயக்குநர் மற்றும்
உடற்கல்வியியல் விளையாட்டுத்
துறைத் தலைவர்  சேது  நன்றி கூறினார். 
subscribe: nellai newspost 
www.youtube.com/user/tamilnewspost
http://nellainewspost.blogspot.in/



ஆலங்குளத்தில் ராகுல் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்






ஆலங்குளத்தில் ராகுல் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் 

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா ஆலங்குளத்தில் நடைபெற்றது. நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் சிவக்குமார், நெல்லை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு ஆகியோர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர். பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது. வட்டார காங்கிரஸ் தலைவர் தங்க செல்வம் வரவேற்றார். நகர தலைவர் செல்லையா, முன்னாள் கவுன்சிலர் பொன்னுசாமி நாடார், மாநிலபேச்சாளர் ஆலடி சங்கரய்யா, நகர துணை தலைவர் ஜோசப், வேல்குமார், ராஜ்குமார், பிரகாஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர், 

more video subscribe nellai newspost -
 www.youtube.com/user/nellainewpost
http://nellainewspost.blogspot.in/

மைனாப்பேரி குளம் தூர்வாரும்பணி-சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்



தென்காசி  நகரம்  32 வது  வார்டில்  அமைந்துள்ள  மைனாப்பேரி குளம் இன்று தூர்வாரும்  பணியினை  மாவட்ட  பொறுப்பாளர்  சிவபத்மநாதன் தொடங்கி  வைத்தார். நிகழ்ச்சிக்கு  நகர  செயலாளர்  சாதீர்  தலைமை தாங்கினார்.  மாவட்ட  விவசாய  தொழிலாளர்  அணி  அமைப்பாளர்  கோமதிநாயகம்  நகர் நிர்வாகிகள்  சொக்கலிங்கம்  நடராஜன்  கலைபால்துரை பால்ராஜ்  ஷேக்  பரீத்  அப்துல்கனி முன்னிலை வகித்தனர்.  மாவட்ட  பிரதிநிதி  பாலசுப்பிரமணியம்  வரவேற்றார்.  நிகழ்ச்சியில்  மாநில  சிறுபான்மை  அணியின்  துணை  செயலாளர்  ரசாக்  மாநில  மாணவரணி  துணை செயலாளர்  ஷெரீப்  மாவட்ட  தொண்டர்  அணி அமைப்பாளர்  இசக்கிப்பாண்டியன்   மாவட்ட  துணை  அமைப்பாளர்கள்  முத்துகிருஷ்ணன்  வளன்அரசு  அற்புதராஜ்  கிட்டுப்பாண்டியன்  சண்முகநாதன்  யோவான்   பேரூர் கழக செயலாளர்  மந்திரம் ஜெகதீசன்  ஒன்றிய  துணை செயலாளர்  ச.பாண்டியன்   ரவி  என்ற லெட்சுமணன்   ஒன்றிய  இளைஞரணி  அழகுசுந்தரம்  ராமராஜ் கணேஷ்குமார்   மோகன் ராஜ் மீசை காஜா  பரமசிவம்  சாகுல்ஹமீது  ரெசவுமைதீன்   அபுல்ஹசன்   இளைஞரணி ஐயப்பன்   இசக்கித்துரை  தேவதாஸ்  முருகானந்தம்  வார்டு கழக நிர்வாகிகள்  சித்தார்த்தன்  சுப்பிரமணியம்  முகைதீன் பிச்சை  பழக்கடை குமாரர்  சுப்பையா பாண்டியன்  மகாலிங்கம்  மணிமாறன்  இராமையாபாண்டியன் அப்துல்காதர்  மற்றும்  கழக நிர்வாகிகள்  கலந்து  கொண்டனர். 32வது வார்டு கழக செயலாளர் மகாலிங்கம்  நன்றி கூறினார்.

Monday, 19 June 2017

சாலைபோக்குவரத்து தொழிலாளர் நோன்பு திறப்பு

சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் சார்பில்
#ரமலான்-#நோன்புதிறப்புவிழா
ஜுன் 19
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம்
சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் கார் வேண் ஸ்டாண்ட் சங்கத்தின்  சார்பில்.
அமீன்புரம் 4 வது தெரு
உமர் அலி ஜும்ஆ பள்ளிவாசல்
அருகில் இப்தார் ரமலான் நோன்பு திறப்புவிழா நடைபெற்றது

விழாவிற்க்கு கார் ஸ்டாண்ட் தலைவர்.தோழர். ரகுமத்அலி அவர்கள் தலைமை வகித்தார்

செயலாளர். அன்சாரி.வேன் ஸ்டாண்ட் தலைவர்.SGR.ஹைதுரூஸ்
செயலாளர். S,மீரான்மைதீன்
பொருளாளர். K A O,முகம்மதுலெப்பை.
சாலை.முன்னால் மாவட்ட. பொருளாளர்.M L M,சதக் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்
விழாவிற்க்கு  
.நெல்லை மாவட்ட. சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட இனைச்செயலாளர்.தோழர். முருகன்
மாவட்ட பொருளாளர்.தோழர் தன்ராஜ்
நெல்லை மாவட்ட
 CITU நிர்வாகி தோழர் மணிகன்டன்

தமிழ்நாடு  சிறுபாண்மை மக்கள் நலக்குழு நெல்லை மாவட்ட துனை அமைப்பாளர் தோழர். ஏ.எம் மீராஷா

தமிழ்நாடு சிறுபாண்மை மக்கள்  நலக்குழு நெல்லை மாவட்ட நிர்வாகி வழக்கறிஞர் தோழர்.நிஜாமுதின்.
மற்றும்
சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின்
மேலப்பாளையம் கிளை தோழர்கள் திரலாக கலந்துகொண்டார்கள்

நெல்லையில்அதிமுக புரட்சிதலைவி அம்மா கட்சி ஆலோசனை

நெல்லையில் நடைபெற்ற அதிமுக புரட்சிதலைவி அம்மா கட்சி சார்பில் பாளையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஒ.பன்னீர்செல்வம் பேசினார் அருகில் பி.எச்.பாண்டியன் முனுசாமி மனோஜ்பாண்டியன் ஏ.கே.சீனிவாசன் மற்றும் பலர் உள்ளனர்

நெல்லை பேட்டையில் திமுக சார்பில் 49வது மதநல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி



      நெல்லை பேட்டையில் திமுக மத்திய மாவட்டம் சார்பில் மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி மாவட்ட கழக செயலாளர் அப்துல் வகாப் தலைமையில் நடைபெற்றது   நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் சிறப்புறையாற்றினார்
     தோழமை கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில துணைத்தலைவர் கோதர்மைதீன், மாவட்ட தலைவர் மீரான்மைதீன், மாவட்ட செயலாளர் பாட்டபத்து முகம்மதுஅலி காங்கிரஸ் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், எஸ்.டி.பி.ஐ.மாநில துணைததலைவர் முபாரக் திமுக தலைமை கழக நிர்வாகிகள் சுப.சீதாராமன், பேச்சிபாண்டியன், 49வது வட்ட கழக செயலாளர் மன்சூர்; அகமது ஆக.மணி மாநகராட்சி முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி மற்றும் மகளிரணி வள்ளியம்மை அனிதா ஆண்டாள்; காந்திமதி ரேவதிஅசோக் ராஜகுமாரி மேலும் பெருமாள் அன்பழகன். பகுதி கழக செயலாளர் பூக்கடைஅண்ணாதுரை கயூம், மற்றும் பலர் கலந்து கொண்டனர் நிறைவாக அலி நாகூர் மீரான் ரபீக் நன்றி கூறினாh

களக்காட்டில் புதிய டாஸ்மாக் கடைக்கு விடுதலை சிறுத்தைகள் எதிர்ப்பு

நெல்லை, ஜூன். 19
நெல்லை மாவட்டம் களக்காடு ஜெ.ஜெ.நகரில் புதிய டாஸ்மாக் அமைப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
   நெல்லை தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஏராளமானோர் மாவட்ட ஆட்சியர் அலுவலத்திற்கு திரண்டு வந்தனர். மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம்  கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில்இ  களக்காடு ஜெ.ஜெ.நகர் பகுதியில் புதிய டாஸ்மாக் கடை அமைப்பதை ஆட்சியர் தடுத்து நிறுத்த வேண்டும். இந்த பகுதியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தை சுற்றி ஊச்சிகுளம்இ சவலைக்காரன் கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். மருத்துவமனை மின்வாரிய அலுவலகம் அமைந்துள்ளது. மாணவ மாணவிகள் இந்த வழியாக பள்ளி செல்வதால் புதியதாக அமைய உள்ள டாஸ்மாக் கடையை தடுத்து நிறுத்த  மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருந்தது.
மேலும் புதிய செய்திகளை விரைவாக அறிந்து கொள்ள-

nellainewspost
www.youtube.com/user/nellainewspost



நெல்லையில் உலகதரத்தில் நீச்சல் குளம்

நெல்லையில் உலகத் தரத்தில் புதிய நீச்சல் குளம்: பேரவையில் முதல்வர் தகவல்

புதிதாக 7 அரசு கலைக் கல்லூரிகள், 3 பல்கலை. உறுப்புகல்லூரிகள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மேலும் புதிதாக 660 உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் முதல்வர் கூறியுள்ளார். நெல்லையில் உலகத் தரத்தில் புதிய நீச்சல் குளம் அமைக்கப்படும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

Friday, 16 June 2017

தமிழ்நாடு பேரூராட்சித்துறை கூட்டமைப்பு உண்ணாவிரதம்



பாளை ஜவஹர்திடலில் தமிழ்நாடு பேரூராட்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டம் சார்பில் மண்டல அளவிலான உண்ணாவிரதபோராட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமரேசன் தலைமை தாங்கினார். மாநில மாவட்ட நிர்வாகிகள் லெனின், ஜனார்தன பிரபு, ஜஸ்டின் திரவியம், சேகர், இராஜகணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர் சங்கம் மாநில தலைவர் எட்வர்டு ஜெபசீலன் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
     தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் மாநில தலைவர் உமா.செல்வராஜ், தூத்துக்குடி மாவட்ட தலைவர் தனசிங், தர்மர், பூவையா, நாராயணன் அல்லாபிச்சை, முருகன், கிரி, சம்சுதீன், வெள்ளைச்சாமி, சந்திரசேகர், இசக்கி முத்து,
    மகளிர் அணி செயலாளர் கலைச்செல்வி, தமிழ்மணி, இராஜேஸ்வரி, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாநில துணைத்தலைவர் குமாரவேல் உண்ணாவிரதபோராட்டத்தை முடித்து வைத்தார்.
    தமிழ்நாடு பேரூராட்சி செயல்அலுவலர் சங்கம் மாவட்ட பொருளார் கந்தசாமி நன்றி கூறினார்.
தகுதிவாய்ந்த கிராம ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்துதல்,காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மூலம் பூர்த்தி செய்தல் உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
more video. subscribe. nellai newspost
www.youtube.com/user/nellainewspost

Thursday, 15 June 2017

மேலப்பாளையம் பள்ளியில் நோன்பு திறப்பு- மதநல்லிணக்க விழா


நெல்லை. ஜூன். 15

        மேலப்பாளையம்,"முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி"யில்,
"இஃப்தார்" நோன்பு திறப்பு மற்றும் "மனித நேய-மத நல்லிணக்க" விழாவில், நடைபெற்றது.
"நெல்லை மனோன்மணியம்" சுந்தரனார் பல்கலைக்கழகப் பதிவாளர்."முனைவர்" .A.ஜான்-டி-பிரிட்டோ மற்றும் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி தாளாளர்..M.A.S.முகம்மது அபுபக்கர் சாஹிப் Ex.சேர்மன் ,"மூத்தபத்திரிக்கையாளர்" நாவலர்.T.S.M.O.ஹஸன் நான்குநேரி,உட்கோட்ட,காவல்துறை உதவிக் கண்-காணிப்பாளர்.
ஷபீக் கரீம்   உள்பட பலா் கலந்து கொண்டனா். 

கல் லி டைக் கு றிச் சி யில் மூதாட் டி கொலை




     நெல்லை மாவட் டம் கல் லி டைக் குறிச்சி பொன் மா ந கர் கால னி யைச் சேர்ந்த கருப் பையா மனைவி புஷ் பம் (65) என் ப வர் கழுத்து அறுத்து கொலை செய் யப் பட் டார். மேலும் அவர் அணிந் தி ருந்த 3 பவுன் நகை யும் திருட்டு போயி ருந் தது.
    சம் பவ இடத்தை நெல்லை எஸ்பி அருண் சக்தி குமார், ஏடி எஸ்பி உத ய கு மார், அம்பை டிஎஸ்பி உத ய கு மார், கல் லிடை இன்ஸ் பெக் டர் சபி யுல்லா ஆகி யோர் பார் வை யிட் ட னர். புஷ் பம் உடல் நெல்லை அரசு மருத் து வக் கல் லூரி மருத் து வ ம னைக்கு அனுப்பி வைக் கப் பட் டது.
கொலை யாளி இப் ப கு தி யைச் சேர்ந் த வ ரா கத் தான் இருக்க
கூடும் என்று போலீ சார் கரு து கின் ற னர். குற் ற வா ளி கள் விரை வில் பிடி ப டு வார் கள் என்று  எஸ்பி அருண் சக்தி குமார் தெரி வித் தார்.

விசைத்தறி நெசவாளர்கள் வேலை நிறுத்தம்


ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கண்டித்து விசைத்தறிக் கூடங்கள் வேலை நிறுத்தம் .

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில், சுப்புலாபுரம், புளியங்குடி ,சிந்தாமணி பகுதிகளில் உள்ள 8 ஆயிரம் விசைத்தறிகள் மத்திய ரசு விதித்துள்ள 5 % முதல் 18% ஜி.எஸ்.டி. வரி விதிப்பை ரத்து செய்ய வலியுறுத்தி 8 ஆயிரம் விசைத்தறி களை இயக்காமல் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்

     நெல்லை,ஜுன். 15       நெல்லை மாவட்டம் பணகுடி அருகே ரோஸ்மியாபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளி புறக்கணிப்பு.நடுநிலை பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த கோரி பெற்றோர்கள் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப மறுப்பு..
அனைத்து மாணவ மானவியர்களும் இன்று பள்ளிக்கு செல்லாமல் புறக்கணிப்பு

Wednesday, 14 June 2017

Nellai Dist Congress- நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா்கள் பதவியேற்பு விழா



     நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா்கள் பதவியேற்பு விழா கொக்கிரகுளம் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்றது.
நெல்லை மாநகர மாவட்ட தலைவா் கே. சங்கரபாண்டியன், கிழக்கு மாவட்ட தலைவா் எஸ்கேஎம். சிவக்குமாா், மேற்கு மாவட்ட காங்கிரஸ்
கமிட்டி தலைவா் எஸ்.பழனி நாடாா், ஆகியோா் இன்று பொறுப்புகளை ஏற்றனா்.
     விழாவில் முன்னாள் மத்திய அமைச்சா் தனுஷ்கோடி ஆதித்தன்,
நெல்லை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா் ராமசுப்பு மற்றும் முக்கிய நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
     முன்னதாக கட்சி அலுவலகத்தில் உள்ள அன்னை இந்திராகாந்தி சிலை, காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்தனா்
     அதேபோல் நெல்லை ரயில் நிலையத்தில் உள்ள காமராஜா் சிலை. பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.
     புதியதாக பொறுப்பேற்றுள்ள தலைவா்களை சந்திக்க மாவட்டம் முழுவதும் இருந்து காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ஏராளமர்னோா் அலுவலகத்திற்கு
வந்திருந்தனா். புதிய தலைவா்களுக்கு சால்வை அணிவித்து மாியாதை செலுத்தினா். மேலும் நெல்லை மாவட்ட தகவல்களை அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். நண்பா்களுக்கு பகிருங்கள்-
subscribe: nellainewspost-
www.youtube.com/user/nellainewspost
http://nellainewspost.blogspot.in/

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுகவினா் மறியல்

நெல்லையில் மாவட்ட செயலாளா் அப்துல் வகாப் தலைமையில் மறியல் செய்த காட்சி . போட்டோ. nellai just now

சங்கரன் கோவிலில் நகர செயலாளா் சங்கரன் தலைமையில் மறியல் செய்த காட்சி

நெல்லை.  ஜூன் . 14
     தமிழக சட்டமன்ற கூட்டத்தொடா் இன்று நடைபெற்றது. எம் எல் ஏக் க ளுக்கு லஞ் சம் கொடுக்க முயன்ற  விவ கா ரத்தை பேச அனு ம திக்க வேண் டும் என்று
 திமுக உறுப் பி னர் கள் கோரிக்கை எழுப் பி ய தால், சட் டப் பே ர வை யில் கூச் சல், குழப் பம் நில வி யது.  இத னால் திமுக உறுப் பி னர் கள் கூண் டோடு
 வெளி யேற் றப் பட் ட னர். பின் னர் சாலை யில் அமர்ந்து மறி ய லில் 
ஈடு பட் ட தால்  கைது செய் யப் பட் ட னர். 
     திமுக செயல்தலைவா் மு.க.ஸ்டாலின் கைது சம்பவத்தை கண்டித்து
தமிழகம் முழுவதும் திமுகவின் சாலை மறியில் போராட்டத்தில் 
ஈடுபட்டனா். நெல்லை சந்திப்பில் மாவட்ட செயலாளா் அப்துல்வகாப் தலைமையில் 
திமுகவினா் மறியல் செய்தனா். நெல்லை மேற்குமாவட்டம் சாா்பில் 
மறியலில் ஈடுபட்ட 500க் மேற்பட்டோரை போலீசாா் கைது செய்தனா். 
     இதேபோல் சங்கரன் கோவிலில் நகர செயலாளா் சங்கரன் தலைமையில்
கட்சியினா் ஏராளமானோா் மறியலில் ஈடுபட்டனா். அம்பாசமுத்திரம்
தாலுகா விக்கிரமசிங்கபுரத்தில் திமுக முன்னாள் சட்டமன்ற சட்டப்பேரவை 
தலைவரும் சபாநாயகருமான ஆவுடையப்பன் தலைமையில் சாலைமறியல்
போராட்டம் நடைபெற்றது. நாங்குநோியில் பஸ் மறியல் செய்த திமுகவினரை
போலீசாா் கைது செய்தனா். நெல்லை மாவட்டத்தில் பல்வேறு 
இடங்களில் திமுகவினா் மறியல் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது 

மேலும் புதிய தகவல்களை அறிந்து கொள்ள  nellai news post -
http://nellainewspost.blogspot.in/
wwww.youtube.com/user/nellainewpost




















துணை வேந்தர் நியமனம் பற்றிய அவசர சட்டம் தேவையற்றது ! மூட்டா விளக்கம்

படவிளக்கம் நெல்லையில் செய்தியாளா்கள் சந்திப்பின்போது ....

நெல்லை.ஜூன். 14-
நெல்லை மூட்டா அலுவலகத்தில் செய்தியாளா்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் மூட்டா பொதுச்செயலாளா் நாகராஜ்,  தலைவா் சுப்பாராஜ், பொருளாளா் ராதாகிருஷ்ணன் ஆகியோா்  செய்தியாளா்களிடம் கூறியதாவது -
தமிழக அரசு  மே 27ம் தேதி துணை வேந்தர் நியமனம் குறித்து சில சட்ட திருத்தங்களை ஓர் அவசர சட்டமாக கொண்டு வந்துள்ளது . தமிழக  சட்ட மன்றம் கூடியுள்ள நிலையில் அவசர சட்டத்திற்கான தேவை என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது. இது சரியான நடைமுறை ஆகாது .
              துணை வேந்தர் நியமனங்களை சீர்படுத்துவதே இந்த அவசர சட்டத்தின் நோக்கமாக  சொல்லப்படுகிறது. ஆனால்  தற்போதுள்ள துணை வேந்தர் நியமனங்களில் உள்ள சீர்கேடுகளுக்கான  காரணிகள் எதுவும் நோக்கத்தில் குறிப்பிடப்படவில்லை. இன்று நிலவுகிற அரசியல் தலையீடு, ஊழல்
போன்ற சீர்கேடுகளை இந்த சட்ட திருத்தம் எந்தவிதத்திலும் நீக்க போவதில்லை. மாறாக இத்தகைய  சீர்கேடுகளை மேலும் வலுப்படுத்தும் .
 தெரிவுக்குழு உறுப்பினராக நியமிக்கப்படுபவர் தேர்ந்த கல்வியாளராக இருக்க வேண்டும்  என்று சொல்கின்ற சட்டத்திருத்தம் , சிறந்த கல்வியாளருக்கு உரிய வரையறையை பின்வருமாறு செய்கிறது .

1)மத்திய அல்லது மாநில அரசு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தராக பணியாற்றுபவர் அல்லது பணியாற்றியவர்
2)பத்து வருடங்களுக்கு குறையாமல் மாநில அல்லது மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக பணியாற்றிய
 சிறந்த கல்வியாளராக இருக்க வேண்டும் .
3)தேசிய பிரசித்திபெற்ற நிறுவனங்களில் இயக்குனர் அல்லது தலைவராக பணியாற்றுபவர் அல்லது பணியாற்றியவராக
 இருக்க வேண்டும் .
கல்லூரிகளில் பேராசியர் பணியிடம் என்பது இல்லை. எனவே இத்தகைய வரையறை, தெரிவுக்குழு உறுப்பினராக கல்லூரியில்
பணியாற்றிய அல்லது பணியாற்றுகின்ற "தேர்ந்த கல்வியாளர் '' ஒருவர் வருவதை தடை செய்கிறது. இதன் மூலம் அரசின் நேரடியான
அல்லது மறைமுகக்கட்டுப்பாட்டில் உள்ளவர்களே தெரிவுக்குழுவில் இடம் பெறமுடியும்  என்றாகிறது.
    துணை வேந்தர் நியமங்களில் ஓரளவேனும் அரசின் தலையீடுகளை எதிர்க்கக்கூடிய கல்லூரி ஆசிரிய சங்க பிரதிநிதிகள்
தெரிவிக்குழுவுக்குள் இடம் பெறாமல் செய்வதே இந்த சட்ட திருத்தத்தின் உள்நோக்கம் என்பது தெளிவாக தெரிகிறது.
தெரிவுக்குழு உறுப்பினருக்கு தகுதியை வரையறை  செய்த சட்ட திருத்தம், துணை வேந்தருக்கான கல்வி தகுதி மற்றும்  பணி அனுபவம் பற்றி வரையறை செய்யவில்லை என்பது  விந்தையானது.
 தமிழக அரசு, ஆளுனருடன் கலந்து பேசி, பின்னர் ஆணையாக அரசிதழில் வெளியிடப்படும் என்று கூறியுள்ளது .
           மேலும் தெரிவுக்குழு உறுப்பினர்கள் எவரும் பல்கலைக்கழகத்தோடும்  மற்றும் இணைவு கல்லூரிகளோடும்
 எவ்விதத்திலும் தொடர்ப்புடையவராக இருக்க கூடாது என்றும் அவசர சட்ட திருத்தம் வரையறை செய்கிறது. இத்தகைய பிற்போக்கான
 வரையறை அப்பல்கலைக்கழகத்தோடுதொடர்புடையவர்கள்  நடுநிலையாக செயல்பட மாட்டார்கள் என்ற நோக்கம் உடையதாக இருக்கிறது.
உண்மையில் பல்கலைக்கழகத்தோடு தொடர்புடையவர்களுக்கு அப்பல்கலைக்கழகத்தின் பலம்,பலவீனம், மற்றும் பல்கலைக்கழக தேவை பற்றி  அறிவும் ,பல்கலைக்கழகத்தின் மீது இயல்பான ஈடுபடும் இருக்க முடியும். அத்தகைய ஒருவர் தெரிவுக்குழுவில் இருப்பது துணை வேந்தர்
 தேர்வை செழுமைப்படுத்தும்.   துணை வேந்தர் நியமனங்களில் சமீப காலமாக அரசியல் தலையீடும் ,ஊழலும்  மலிந்து விட்டதாக அண்ணா பல்கலைக்கழக மேனாள் துணை வேந்தரும் சிறந்த கல்வியாளருமான  திரு. அனந்தகிருஷ்ணன்  விமர்சித்திருக்கிறார். தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள
 சட்ட திருத்தம் இந்த சீர்கேடுகளை ஒருபோதும் களையாது.
தெரிவுக்குழு சுதந்திரமாக இயங்க வேண்டும் என்றால் அக்குழுவில் அரசு / ஆளுநரின் பிரதிநிதி இருக்க கூடாது .
    இந்த திருத்தத்தை செய்வதற்கு பதிலாக , அரசின் கட்டுப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் இந்த அவசர சட்ட திருத்தம் கவலையளிக்கிறது .
எனவே இத்தகைய தேவையற்ற சட்ட திருத்தத்தை இன்னும் ஓரிருநாளில் கூடவிருக்கிற சட்டமன்ற கூட்டத்தொடரில் நிரந்தர சட்டமாக்க முன் மொழியாமல் , உயர்கல்வியோடு தொடர்புடைய  கல்லூரி மற்றும் பல்கலைக்கழக  ஆசிரியர்கள் , தேர்ந்த கல்வியாளர்களோடு கலந்து ஆலோசித்து திறமையான ,நேர்மையான மற்றும் ஆளுமை கொண்ட
துணை வேந்தரை நியமனம் செய்யும் வகையில் தேவையான சட்ட திருத்தத்தை கொண்டு வருமாறு வேண்டுகிறோம். மேலும்,
 கல்லூரிகளில் பேராசிரியர் பணியிடம் என்பது இல்லை என்பதால், துணை வேந்தருக்கான கல்வி தகுதி மற்றும் பணியனுபவம் பற்றி வரையறை  செய்யும் போது, கல்லூரியில் பணிபுரியும் இணை பேராசிரியர்களும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகிறோம். .இவ்வாறு அவா்கள்
தொிவித்தனா்.
மேலும் புதிய தகவல்களை அறிந்துகொள்ள nellainewspost  http://nellainewspost.blogspot.in/
www.youtube.com/user/nellainewspost

Tuesday, 13 June 2017

திசையன்விளையில் கொலை

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே தெற்கு ஏராந்தையில் சொத்து தகராறில் துரைபாண்டி என்பவர் வெட்டி கொலை..
தேவபாலன் என்பவர் போலீசாரிடம் சரண்.
திசையன்விளை போலீசார் விசாரணை

மேலும் புதிய தகவல்களை அறிந்துகொள்ள nellainewspost  http://nellainewspost.blogspot.in/
www.youtube.com/user/nellainewspost

குத்துக்கல் வலசையில் திமுக சாா்பில் நலத்திட்ட உதவிகள்

    தென்காசி ஒன்றியம் குத்துக்கல் வலசையில் திமுக  ஒன்றிய இளைஞரணிசார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்புக் வழங்கும் நிகழ்ச்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
   நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் இராமையா தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அழகுசுந்தரம் வரவேற்றார் ஊராட்சி செயலாளர் காசி கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.
   நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கழக கொடியேற்றி குழந்தைகளுக்கு நோட்புக் பெண்கள் 300பேருக்கு சேலைகளை மாவட்டசெயலாளர் சிவபத்மநாதன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ரசாக்ex.MLA,மாவட்ட அவைத்தலைவர் முத்துப்பாண்டி துணைச்செயலாளர்கள்  நடராஜன் ,பேபி,பொருளாளர் சேக்தாவூது,ஒன்றியசெயலாளர்கள் ரவிசங்கர்,செல்லத்துரை நகரசெயலாளர்கள் சாதீர் ,ரஹீம், மாவட்ட அணி அமைப்பாளர்கள் கோமதிநாயகம் பரமசிவம் திவான் ஒலி இசக்கிப்பாண்டி இஞ்சி.இஸ்மாயில்  பேரூர்கழக செயலாளர்கள் மந்திரம் சுடலை, மாரியப்பன், முத்தையா, ராஜராஜன்,   அணி துணை அமைப்பாளர் கள் வளன் அரசு கிட்டு கோமதிநாயகம் அற்புதராஜ் முத்துவேல் சண்முகநாதன்    யோவான்   முத்துலதா ராமராஜ் இளைஞரணி ஐவேந்திரன் மாவட்டபிரதிநிதி மாறன் சுடலைமுத்து மங்களவிநாயகம் முதலியான்கான்  ஜீவானந்தம் மோகன்ராஜ்  கிருஷ்ணன் ஊராட்ச்சி செயலாளர்கள் களகராஜ் முத்துப்பாண்டியன் சிவன்பாண்டியன் வேல்ராஜ்   மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
     இதைத்தொடர்ந்து கழக செயல்தலைவர் தளபதியாரின் அறிவிப்பிற்கிணங்க குத்துக்கல்வலசை ஊற்றுக்கரை குளம் தூர் வாறும் பணியினை மாவட்ட கழக செயலாளர் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்.
மேலும் புதிய தகவல்களை அறிந்துகொள்ள nellainewspost  http://nellainewspost.blogspot.in/
www.youtube.com/user/nellainewspost

நெல்லை அதிமுக முன்னாள் மேயர் புவனேஸ்வரி மீது வழக்கு

   


      நெல்லை அதிமுக முன்னாள் மேயர் புவனேஸ்வரி , முன்னாள் ஆணையர் உள்பட 9 பேர் மீது நெல்லை முதன்மை அமர்வு நீதிமன்றம் வழக்கு பதிவு செய்ய உத்தரவு, அதிமுக நடத்திய மகளிர் தினவிழாவுக்கு மாநகராட்சி நிதியை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு
கடந்த 08.03.15 அன்று நெல்லை மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்ட மகளிர் தின விழாவில் நிதி மோசடி செய்ததாக நெல்லையை சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா என்பவர் தொடர்ந்த வழக்கில்  முன்னாள் மேயர் புவனேஸ்வரி, முன்னாள் மாநகராட்சி ஆணையர் லெஷ்மி, மாநகராட்சி நல அலுவலர்  ( பொறுப்பு )கருப்பசாமி, உதவியாளர் காசிவிஸ்வநாதன், இளநிலை உதவியாளர் இளமுக எழிலரசி, ( சாந்தி, சுந்தரி, கலாவதி )சமூக  அமைப்பாளர்கள்,   உதவி ஆணையர் கணக்கு கீதா ஆகிய 9 பேர் மீது வழக்கு பதிவு செய்ய மாவட்ட குற்றவியல்  நீதிமன்ற நீதிபதி ராமதாஸ் மாநகர குற்றப்பிரிவு காவல் ஆய்வாளருக்கு உத்தரவு ..
மேலும் புதிய தகவல்களை அறிந்துகொள்ள nellainewspost  http://nellainewspost.blogspot.in/
www.youtube.com/user/nellainewspost

தென்காசியில் போலி எஸ்ஐ சிக்கினாா் - வசூல் வேட்டை

       தென்காசி மேலகரத்தை சோ்ந்தவா் செல்வக்குமாா். ஆட்டோ டிரைவா். இவா்எஸ்ஐ போல உடுப்பு அணிந்து குற்றாலம் சீசனுக்கு வரும சுற்றுலாப்
பயணிகள் வாகனங்களை வழிமறித்து வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளாா். தூத்துக்குடி G3காவல் நிலையத்தில் SI ஆக பணி புரிவதாக கூறி ஏமாற்றி
 உள்ளார். மேலகரம் மற்றும் பாரதிநகர் பகுதியில்  வாகனதணிக்கை செய்து பணம் பறித்து உள்ளார். இன்று ரோந்து சென்ற தென்காசி போலீசாா்
சந்தேகத்தின் போில் விசாாித்தபோது செல்வக்குமாா் போலி எஸ்ஐ என்பது தொியவந்தது. மேலும் செல்வக்குமாா் வேறு ஏதாவது
 மோசடியில் ஈடுபட்டாரா என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் புதிய தகவல்களை அறிந்துகொள்ள nellainewspost  http://nellainewspost.blogspot.in/
www.youtube.com/user/nellainewspost

நெல்லையில் கட்டுமான தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்


https://youtu.be/FBPHTHMmwRY


   
        நெல்லையில் சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மாவட்ட நலவாரிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். கட்டுமான தொழிலாளர்களுக்கு பென்சன்இ கல்வி திருமண உதவித ;தொகைஇ இயற்கை மரண உதவி விண்ணப்பங்களுக்கான பண உதவிகளை உடனடியாக வழங்கவேண்டும்.
      கட்டுமான பணிகளுக்கு மணல் தடையின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இயற்கை மரண நிவாரண உதவித் தொகையை ரூபாய் 1 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். நிகழ்வுகளை நேரலையில் காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்
 https://youtu.be/FBPHTHMmwRY

நெல்லைமாவட்ட நிகழ்வுகளை காண www.youtube.com/user/nellainewspost
subscribe nellainewspost 

Monday, 12 June 2017

தென்காசி மருத்துவமனையில் கூடுதல் வசதி

நெல்லை மாவட்டம் தென்காசியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் அனுமதிக்கபடும் நோயாளிகளுக்கு போதுமான படுக்கை வசதி, போதுமான மருத்துவ வசதிகள் அளித்திடவும், தொற்றுநோய் பரவும் 33 வார்டு பகுதிகளிலும் மருத்துவ முகாம் அமைத்திட கோரியும் அகில இந்திய முஸ்லீம் லீக் சார்பாகவும், பொதுமக்கள் சார்பாகவும், அரசு மருத்துவமனை இணை இயக்குநரிடம் மனு .அளித்தனர்.

தமிழக பத்திாிகையாளா் பாதுகாப்பு நலச்சங்கம் கூட்டம்

   




குற்றாலம்- ஜூன் - 12
    தமிழக பத்திாிகையாளா் பாதுகாப்பு நலச்சங்கம் கூட்டம் குற்றாலத்தில் நடைபெற்றது. நெல்லை, தென்காசி, ஆலங்குளம், முக்கூடல் அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை  சோ்ந்த சங்க உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். சங்கத்தை பதிவு செய்வது குறித்தும்.
 சங்க உறுப்பினா்கள் வருடச்சந்தா மற்றும் சங்கத்தின் வளா்ச்சி செயல்பாடுகளை குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.
     சங்க உறுப்பினா்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனா். மாநில தலைவராக அழகிய நம்பி குமாரசாமி  சங்க உறுப்பினாகளால் ஒரு
மனதாக தோ்ந்தெடுக்கப்பட்டாா். மாநில துணை தலைவா் மணிகண்டன், மாநில  செயலா் மிதாா் மைதீன், துணை செயலா் முத்துக்குமாா் , இணை செயலாளா் சிவஹாிசங்கா்,  பொருளாளா் காா்த்திக் மற்றும். செயற்குழு உறுப்பினா்கள் 10 போ் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
      சங்கம் பதிவு செய்யும் பணி முடிவடைந்ததும் அடுத்த கூட்டம் நடைபெறும் தேதி அறிவிக்கப்படும் என சங்க உறுப்பினா்கள், நிா்வாகிகளுக்கு தொிவிக்கப்பட்டது.   சங்கத்தின் முதல்கட்டம். இரண்டாவது கட்டமாக நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினா்கள், சங்கத்தின் வளா்ச்சிக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தொிவிக்கப்பட்டது.

மேலும் புதிய தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள இணைந்திருங்கள் nellai news post  -       www.youtube.com/user/nellainewspost