Tuesday 17 September 2019

சங்கை தனி மாவட்டம் போராட்டம்

சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி  ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம், கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது

சங்கரன்கோவில், திருவேங்கடம், சிவகிரி, வி.கே.புதூர் 4 தாலுகா தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்... என வலியுறுத்தி
கடைகள், காய்கறி சந்தை, 5 ஆயிரம் விசைத்தறி மூடல்...
வர்த்தக சங்கம், ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம், நகை கடை, அனைத்து வியாபாரிகள் சங்கம் பங்கேற்பு... ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது

சுரண்டையில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்- பெரியார் பிறந்தநாளில்

நெல்லை மேற்கு மாவட்டம் கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம் சுரண்டை பேரூரில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 111 வது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு மருத்துவர் முருகையா அவர்கள் தலைமை தாங்கினார்கள். நகரக் கழக நிர்வாகிகள் ஜெயராஜ் ,பூல் பாண்டியன், சங்கரநயினார், சபர் நிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர் நகரக் கழக  இளைஞரணி முன்னாள் அமைப்பாளர், சங்கரபாண்டியன், வரவேற்றுப் பேசினார் நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் ஜெயபாலன் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிவ பத்மநாதன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார் நிகழ்ச்சியில் முன்னாள் நகர கழக செயலாளர் ஆறுமுகசாமி, மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் முருகன், மீனவர் அணி துணை அமைப்பாளர் மெரிட்டன், கீழப்பாவூர் பேரூர் கழக செயலாளர் ஜெகதீசன், பேராசிரியர் சாக்ரடீஸ் சிறுபான்மை அணி ஷேக் மைதீன், முருகேசன், சங்கரன் சொசைட்டி முருகன் மாரியப்பன், வேல்சாமி பிரின்ஸ் குமார் வடகரை ராமர் ,தென்காசி ராமராஜ் ,அரவிந்த் சிதம்பரம், மாடசாமி, ஒன்றிய தொண்டரணி செல்வம், மாரியப்பன் குமார், நைனார், பிரஷாந்த், முருகன், கணேசன் ,அருணா, ஐயப்பன் ,குமார் முத்து குமார்,சாமி பந்தல் ஆறுமுகச்சாமி ஒன்றிய பிரதிநிதி எம். எஸ். ஐயப்பன் கே. ஏ. கணேசன் வேல்முருகன் மாரியப்பன் செல்லத்துரை, மாடசாமி எலக்ட்ரீசியன் அருணா, சுப்பிரமணியன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் மாவட்ட ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் சங்கரநயினார் நன்றி கூறினார் நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு தென்னங்கன்று கொத்தனார் வேலைக்கான உபகரணங்கள் விவசாயிகளுக்கான மருந்து தெளிப்பான் மண்வெட்டி ஆகியன வழங்கப்பட்டன... நிகழ்ச்சியை ஒன்றிய கழக செயலாளர் ஜெயபாலன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்...

Wednesday 29 May 2019


நெல்லை கலெக்டர் அலுவலகத்தில்  நெல்லை பாராளுமன்ற எம்.பி ஞான திரவியம் மரியாதை நிமித்தமாக கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ்யை  சந்தித்து பூங்கொத்து வழங்கினார். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராம விங்கம், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார் ஆகியோர் உள்ளனர்