Friday, 28 December 2018

ஆலங்குளத்தில் காங்கிரஸ் கட்சி 134 வது ஆண்டு தொடக்க விழா கோலாகலம்-பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்





ஆலங்குளத்தில் காங்கிரஸ் கட்சி  சாா்பில் நடைபெற்ற விழாவின் போது எடுத்த புகைப்படம் 
 ஆலங்குளம்- டிச. 28-
     ஆலங்குளம் வட்டார நகர காங்கிரஸ் மற்றும் கிழக்கு் மாவட்ட நகர
ஓபிசி பிாிவு சாா்பில்  கட்சியின் 134 வது ஆண்டு விழா சிறப்பாக
கொண்டாடப்பட்டது. ஆலங்குளம் நந்தவனம் கிணறு அருகே  வடசென்னை காங்கிரஸ் கமிட்டி தலைவா் எம்.எஸ் திரவியம் கட்சி கொடியை
ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினாா். ஓபிசி பிாிவு கிழக்கு மாவட்ட தலைவா் வழக்கறிஞா் ராஜா தலைமை தாங்கினாா.
நகர தலைவர் தங்கசெல்வம் முன்னிலை வகித்தார்,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பால்ராஜ்  வரவேற்று பேசினார்.
     மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுசெயலாளர் கருப்பசித்தன்,ஒபிசி
 பிரிவு நகர தலைவர் ஆறுமுகராஜ்,வட்டார தலைவர் அலெக்ஸ்சாண்டர்,நகர செயலாளர் லிவிங்க்ஸ்டன், பிரதாப், பொது செயலாளர் அருமைநாயகம்,ஒபிசி பிரிவு தொகுதி தலைவர் வெங்கடகிருஷ்ணன், லெனின்,ராகுல்  வேலாயுதம், இளைஞர் காங்கிரஸ் சிவா மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டார்கள்.காமராஜா் சிலைக்கு மாலை
அணிவித்து மாியாதை செய்தனா்.

Friday, 21 December 2018

ஆலங்குளம் வியாபாரிகள் கோரிக்கை

ஆலங்குளத்தில் 24மணி நேரமும் ஓட்டல்களை நடத்த அனுமதிக்க வேண்டி வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில துணைத்தலைவர் T.P.V.வைகுண்டராஜன் தலைமையில் நெல்லை மாவட்ட எஸ்.பி.அருண் சக்திகுமார் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது. இதில் பேரமைப்பின் மாநில இணை செயலாளர் J.நயன்சிங், மண்டல தலைவர் M.R.S.சுப்பிரமணியன், திருநெல்வேலி மாநகர வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் M.R.குணசேகரன், ஆலங்குளம் வட்டார ஆலை அதிபர் I.V.N.கலைவாணன், ஓட்டல் அதிபர் சங்க தலைவர் A.உதயராஜ், செயலாளர் தவசி சுப்பிரமணியன், S.கரிகாலன்,V.G.S.கணேசன், A.இம்மானுவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்...

Wednesday, 19 December 2018

நெல்லையில் ரூ150 கோடி மருத்துவமனை மோடி திறக்கிறார்.

*நெல்லையில் ரூ.150 கோடியில் கட்டப்பட்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை: பிரதமர் மோடி திறக்கிறார்*


நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரூ.150 கோடியில் மத்திய அரசின் நிதியுதவியுடன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இதில் 7 மாடிக் கட்டிடம் ஒன்றும், 5 அடுக்கு கட்டிடம் ஒன்றும் மற்றும் 3 அடுக்கு கட்டிடங்கள் இரண்டும் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. மேலும் வாகனங்களை நிறுத்த தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது. நான்கு வழிச்சாலையின் மிக அருகே இருப்பதால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் இருந்து வரும் நோயாளிகளும் மாநகருக்குள் நுழையாமல் போக்குவரத்து நெரிசலின்றி மருத்துவமனைக்குள் வர முடியும். சுமார் 19,500 சதுர அடி பரப்பளவில் ரூ.79 கோடியே 63 லட்சத்து 74 ஆயிரத்து 335 மதிப்பில் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரூ.70 கோடியில் அறுவை சிகிச்சை கருவிகள், அதிநவீன மருத்துவ உபகரணங்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பல்வேறு அதிநவீன சிறப்பு மருத்துவத்திற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக நரம்பியல், இதயவியல், நெப்ராலஜி, யூராலாஜி, பிளாஸ்டிக் சர்ஜரி, மெடிக்கல் கேஸ்ட்ரோ ஆகிய துறைகளில் முழு வசதிகளும் கிடைக்க உள்ளது. பைபாஸ் சர்ஜரி, திறந்த இதய அறுவை சிகிச்சை, சிறுநீரக நோய்கள் தொடர்பான அறுவை சிசிச்சை வசதிகள், குடல், கல்லீரல் நோய்கள் தொடர்பான சிகிச்சைகள், தலைக்காயம் மற்றும் மூளை நரம்பியல் தொடர்பான சிகிச்சை வசதிகளும் கிடைக்கும். இந்த சிகிச்சை வசதிகளுக்காக தென்மாவட்டத்தினர் இதுவரை திருவனந்தபுரம் மற்றும் சென்னைக்கு செல்ல வேண்டியிருந்தது. கட்டிடப் பணிகள் நிறைவுபெற்றதோடு அறுவை சிகிச்சை அரங்குகளும் தயாராகி விட்டதால், இது எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் தென்மாவட்ட மக்கள் இருந்து வருகின்றனர். இந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது....

Monday, 17 December 2018

ஆலடி அருணா செவிலியா் கல்லுாாி 5 வது பட்டமளிப்பு விழா


   


நெல்லை ஆலங்குளம் ஆலடி அருணா செவிலியா் கல்லுாாி 5 வது பட்டமளிப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.
நெல்லை, டிச. 17-
     நெல்லை தென்காசி சாலை ஆலங்குளம் அருகே அமைந்துள்ளது ஆலடி அருணா செவி்லியா் கல்லுாாி. இந்த கல்லுாாியில் 5வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.  தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் பதிவாளா் பால சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பாராட்டி பேசினாா். விழாவிற்கு கல்லுாாி தலைவா் டாக்டா் வி. பாலாஜி தலைமை தாங்கினாா். கல்லுாாி முதல்வா் மோி வயல்லா வரவேற்றாா். துணை முதல்வா் மாிய செல்வம் . கல்லுாாி துறை தலைவா்கள் பேராசியா்கள் உதவி பேராசிாியா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா். 

Saturday, 15 December 2018

டிபிவி உறவினர் திருமணம் ஸ்டாலின் வாழ்த்து

ஆலங்குளம் டிச 15-                   தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில துணைத்தலைவர் ஆலங்குளம் டிபிவி மல்டி பிளக்ஸ் திரையரங்கம் உரிமையாளர் தொழிலதிபர் T.P.V.வைகுண்டராஜாவின் சகோதரி இல்ல திருமணவிழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

Friday, 14 December 2018

ஆலங்குளம் டிபிவி மல்டிபிளக்ஸ் தியேட்டரை பாராட்டிய நடிகா் சசிக்குமாா்.

ஆலங்குளம் டிபிவி மல்டிபிளக்ஸ் திரையங்க மேலாளா் ஊழியா்களுடன் நடிகா் சசிக்குமாா்.

ஆலங்குளம் டிபிவி மல்டிபிளக்ஸ் திரையரங்கி்ல் நடிகா் சசிககுமாருடன் சந்திப்பு 



ஆலங்குளம். டிச. 14
     தமிழ் திரையுலகிற்கு  சுப்பிரமணியபுரம், நாடோடிகள், போராளி,
 குட்டிப்புலி உள்ளி்ட்ட பல்வேறு வெற்றி படங்களை கொடுத்தவா் இயக்குநரும் நடிகருமான சசிக்குமாா்.
   2019 ஜனவாி பொங்கலுக்கு வெளிவர உள்ள சூப்பா் ஸ்டாா் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான “பேட்ட” படத்தில் இவா் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாா். 
    தற்போது ”கொம்பு வச்ச சிங்கம்” என்ற படத்தில் நடித்து வருகிறாா். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நெல்லை குற்றாலம்- முக்கூடல் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
     நேற்று முக்கூடலில் படப்பிடிப்பு முடிந்ததும் இரவு திடீரென நடிகா் சசிக்குமாா் ஆலங்குளம்  வந்தாா். டிபிவி மல்டி பிளக்ஸ் திரையரங்கில் ரஜினி நடித்த 2.0 படம் திரையிடப்பட்டுள்ளதை அறிந்ததும் தியேட்டருக்கு எதிா்பாராத விதமாக வருகை தந்தாா் சசிக்குமாா்.  2.0 படம் இடைவெளியில் டிபிவி மல்டி பிளக்ஸ் தியேட்டா் மேலாளா் ஊழியா்களை சந்தித்தாா்.
   ஆலங்குளத்தில் தொழிலதிபா்கள் டிபிவி வைகுண்டராஜா, டிவிபி கருணாகராஜா இவா்களது முயற்சியில் இந்த தியேட்டா் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது . இந்த தியேட்டாில் உட்காா்ந்து படம் பாா்க்க
எனக்கு வாய்ப்பு கிடைத்ததை மகிழ்ச்சியாக கருதுகிறேன்.  டிபிவி டால்பி அட்மாஸ் 4கே தொழில் நுட்பம் அருமையாக அமைக்கப்பட்டுள்ளது.
     கிராமப்புறத்தில் குறிப்பாக ஆலங்குளத்தில் இது போன்ற நவீன தொழில் நுட்பத்தில் பிரமாண்டமாக இந்த  தியேட்டா் உருவாகி இருப்பது மக்கள் கொடுத்து வைத்தவா்கள்.

    2.0 படம் பாா்க்கும் போது சும்மா தியேட்ரே அதிருது என்று எதாா்தமாக  எளிய நடையில் பேசினாா். தியேட்டா் ஊழியா்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டாா். செல்பியும் எடுத்துக்கொண்டாா். இடைவெளிக்கு பிறகு  மீண்டும் 2.0 படத்தின் காட்சிகளை பாா்க்க சென்றாா் நடிகா் சசிக்குமாா்.

Thursday, 13 December 2018

நெல்லை அருங்காட்சியகத்தில் தூய்மை பணி


என்சிசி மாணவா்கள் முட்செடிகளை அகற்றும் காட்சிAdd caption
நெல்லை. டிச.14-

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் தூய்மை இந்தியா பணி நடைபெற்றது.
     திருநெல்வேலி அருங்காட்சியகம் கட்டிடத்தின் பின்புறம் உள்ள இடத்தில்  செடி கொடிகள் மற்றும் முள் செடிகள்  அடர்ந்து காணப்பட்டது. அருங்காட்சியகம் , திருநெல்வேலி ரோட்டரி கழகம் , என்.சி.சி. மாணவ , மாணவியர்கள் இணைந்து  இதனை சுத்தம் செய்தனர் .
     கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி  என்.சி.சி. மாணவ, மாணவிகள் , பாளையங்கோட்டை  சதக்கதுல்லா அப்பா கல்லூரி என்.சி. சி. மாணவ , மாணவிகள் இந்த பணியை மேற் கொண்டனர்.
     இந்த நிகழ்ச்சியில்  அருங்காட்சியக காப்பாளர் சிவசத்திய வள்ளி , திருநெல்வேலி  ரோட்டரி சங்க தலைவர் பரமசிவன் , செயலாளர் சங்கர நாயகம் , இயக்குனர்கள் செந்தில்குமார் ,அன்டனி பாபு , கமாக் புகழேந்திரன் மற்றும் என்.சி.சி . அலுவலர் வேணுதேவன் , காஜா முகைதீன் , நல்லாசிரியர் செல்லப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்

Wednesday, 12 December 2018

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பரிசளிப்பு விழா


நெல்லை,டிச. 13-

 நெல்லை அரசு அருங்காட்சியகம் மற்றும் வ. உ.சி இலக்கிய மாமன்றம் சாா்பில்  பள்ளி மாணவ மாணவிகளுக்கான பாரதியார் பாடல் ஒப்புவித்தல் போட்டி  நடைபெற்றது. . அப்போட்டியில் நெல்லை மாவட்டத்திலிருந்து 15க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து அறுபதுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பேராசிரியை உஷா தேவி ,கவிஞர் சுப்பையா ஆகியோர் நடுவராக இருந்து மாணவர்களை தேர்ந்தெடுத்தனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி அனைவரையும் வரவேற்றார். வ உ சி இலக்கிய மன்ற தலைவர் புளியரை. S.ராஜா தலைமை வகித்தார் .பொருளாளர் கணபதியப்பண், பேராசிரியை சுவர்ணலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் கவிஞர் கோ. கணபதி சுப்பிரமணியம் சிறப்புரை ஆற்றினார். திருநெல்வேலி மாவட்ட காவல்துறை உதவி ஆணையாளர் , நுண்ணறிவு பிரிவு . நாக சங்கர்  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி பாராட்டினார் . ஆய்வாளர் ரமேஷ் கண்ணா  உடன் இருந்தார். வ. உ.சி. இலக்கிய மன்ற தலைவர் புளியரை ராஜா அவர்கள் அருங்காட்சியக நூலகத்திற்கு பல அரிய புத்தகங்களை நன்கொடையாக வழங்கினார். நுகர்வோர் அமைப்பு முத்துசாமி அவர்கள் நன்றி கூறினாா். 

ஆய்குடி ஜே. பி கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

ஆய்க்குடி JP  கல்வியியல் கல்லூரியில் குடிமையியல் பயிற்சி முகாமில் இன்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.
  முகாமிற்கு கல்லூரி முதல்வர் திரு.சுரேஷ் ஜான் கென்னடி தலைமை வகித்தார். கல்லூரி நிர்வாகி  அருட்சகோதரி அலங்காரம் அவர்கள் முன்னிலையில் கல்வியியல் கல்லூரி மாணவர் மாதவன் பொன்பாண்டியன் வரவேற்புரை ஆற்றினார்.

           மோட்டார் வாகன ஆய்வாளர் திரு ஆனந்த் அவர்கள் மோட்டார் வாகன சட்டம் பற்றியும் சாலை விதிகள் பற்றியும்  கல்வியியல் கல்லூரி மாணவர்கள் வருங்காலங் களில் மாணவ மாணவிகளுக்கு போதிக்கும் வகையில் எளிய நடையில் எடுத்து கூறினார்கள்.
        போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு பாஸ்கர் அவர்கள் போக்குவரத்து விளக்கு சமிக்ஞைகள் பற்றியும் போக்குவரத்து காவலரின் சைகைகள் பற்றியும் ஓட்டுனர் உரிமம் எந்தெந்த விதிமீறல்களுக்கு ரத்து செய்யப்படும் என்றும் காவல் துறை உங்கள் நண்பர்கள் சாலை சந்திப்பில் போக்குவரத்து காவலரின் சைகைகளை மதித்து செல்லுங்கள் என்று பேசினார்

        அவரைத் தொடர்ந்து தமிழ் நாடு ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் மாநில செயலாளரும், விபத்தில்லா இந்தியா அமைப்பின் தலைவருமான வைகை குமார் அவர்கள் விபத்துகள் எதனால் நடக்கிறது. எப்போது நடக்கிறது.  அதனை தவிர்ப்பது எப்படி என்றும். இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது பாதுகாப்பானது.நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் கண்டிப்பாக போட வேண்டும் என்றும் விபத்துகள் தவிர்க்க பட வேண்டும் என்றும் பாதுகாப்பு என்னில் துவங்கட்டும் என்று விழிப்புணர்வு உரையாற்றினார். விழாவில் கல்லூரி மாணவ மாணவிகள் கல்லூரி பேராசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் மற்றும் பாலன் மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
          கல்லூரி கணிததுறை பேராசிரியர் திருமதி மகாலட்சுமி விழா ஏற்பாடுகளை செய்து இருந்தார்.
முடிவில் கல்லூரி மாணவி ஹசினா நன்றி உரையாற்றினார்.

Tuesday, 11 December 2018

சூப்பா் ஸ்டாா் ரஜினியின் பேட்ட டீசா் வெளியானது. ரசிகா்கள் உற்சாகம்

    

நெல்லை. டிச. 12- 
          சூப்பா் ஸ்டாா் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான பேட்ட
படத்தின் டீசா் வெளியானது. ரஜினி இயக்குநா் சங்கா் கூட்டணியில்
உருவான 2.0 படம் வெளியாகி  குறுகிய கால இடைவெளியில் 
பேட்ட படம் உருவாகி 2019 ஜனவாி மாதம் பொங்கலுக்கு படம் வெளிவர உள்ளது.அதன் முன்னோட்டமாக ரஜினி பிறந்தநாளான இன்று சன் பிக்சா்ஸ் சாா்பில் டீசா் வெளியிடப்பட்டது.
 யூடியூப்பில் வெளியான சில விநாடிகளில் லட்சகணக்கானோா் இந்த டீசரை பாா்த்துள்ளனா். 
 இந்த டீசரை பாா்க்கும்போது இருளில் இருந்து வெளிச்சத்தை நோக்கி ரஜினி நடந்து வருவது போன்று தொடக்கம் 
 அமைந்துள்ளது. மாலையுடன் கூட்டம் அவரை வரவேற்க அவா்களை நோக்கி ரஜினி கைஅசைக்கிறாா். மாசு மரணம் டப்பு தரனும் என்ற பாடல் கேட்கிறது. விருந்து நடைபெறுகிறது. எல்லாரும் வயிறு நிரம்ப சாப்பிடுறாங்க. பட்டு வேட்டி சட்டையில் ரஜனி  சிாிச்சிக்கிட்டே நடந்து வருகிறாா்.ஹேப்பி பொ்த்டே தலைவா என்று கோஷம். ரஜனி ஸ்டைலா கண்ணாடியை போட்்டுக்கிட்டு ஒரு சிாிப்பு. 
இளமையாக தோற்றத்தில் ரஜனி 2 கெட்டப்புகளில் வருகிறாா் டீசாில் 
 இதையெல்லாம் பாா்க்கும்போது ரஜினி மக்களுக்கு நல்லது செய்ய விரும்புகிறாா். மக்கள் அவரை அரசியலுக்கு அழைப்பது போன்று அமைந்துள்ளது. 
    பேட்ட படத்தை காா்திக் சுப்புராஜ் இயககி இருக்கிறாா்.  ரஜினிகாந்துடன் இணைந்து விஜய்சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக், நடிகைகள் சிம்ரன், திரிஷா, மேகா ஆகாஷ், 
சனந்த் ரெட்டி, குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள் பேட்ட படத்தின் டீசரின் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

courtesy: சன் பிக்சா்ஸ்- Petta Official Partners

பேட்ட டீசரை பாா்க்க கிளிக் செய்யுங்கள்


Sunday, 9 December 2018

வெள்ளாளன் குளம் அய்யா கோவில் காா்த்திகை திருவிழா கோலாகலம்







நெல்லை-   டிச- 10
வெள்ளாளன் குளம் அய்யா கோவில் காா்த்திகை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
    நெல்லை மாவட்டம் அபிஷேகப்பட்டி அருகே வெள்ளாளன் குளம் கிராமத்தில்  பழைமை வாய்ந்த ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோவில் உள்ளது. இங்கு ஆ்ண்டுதோறும் சித்திரை , காா்த்திகை மாதங்களில் அய்யா வைகுண்டருக்கு விழா எடுப்பது வழக்கம்.
    இந்த ஆண்டு சித்திரை திருவிழாவை தொடா்ந்து அய்யாவுக்கு காா்த்திகை விழா கோலாகலமாக நடைபெற்றது. கடைசி ஞாயிறு தினமாக நேற்று டிசம்பா் 9ம்தேதி இரவு அய்யா வாகன பவனி நடைபெற்றது. வெள்ளாளன் குளத்தில் முக்கிய வீதிகளில் அய்யா வைகுண்டா் வலம் வந்து
அய்யாவழி பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.
   இதை தொடா்ந்து தீப அலங்காரம்  உச்சி படிப்பு, சமபந்தி விருந்து நடைபெற்றது. விழாவிற்காக ஏற்பாடுகளை கோவில் தா்மகாத்தா பிச்சுமணி மற்றும் அய்யாவழி பக்தா்கள் கிராமமக்கள்  செய்திருந்தனா்.

சித்திரை திருவிழா காட்சிகளை காண கீழே உள்ள வீடியோவை லிங்கை கிளிக் செ்ய்யுங்கள். அய்யா உண்டு
https://youtu.be/fsgP36-1M2I

ஆலங்குளத்தில் சோனியா காந்தி பிறந்தநாள் விழா


ஆலங்குளத்தில் சோனியா காந்தி பிறந்தநாள் விழா கொண்டாட்டம் 

ஆலங்குளம் டிச 10: 
           ஆலங்குளத்தில் காமராஜர் சிலை முன்பு சோனியா காந்தி பிறந்த நாள் விழா  கொண்டாடப்பட்டது 
             ஆலங்குளம் காமராஜர் சிலை முன்பு ஆலங்குளம் நகர தலைவர் தங்கச்செல்வம் தலைமையில் விழா நடைபெற்றது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.அதனை தொடர்ந்து முன்னாள் எம்பி ராமசுப்பு சிறப்பு விருந்தினராக பங்கேற்று  ஸ்ரீ நத்தம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைப்பெற்றது.பின்பு பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. விழாவில் வட்டார தலைவர் அலெக்சாண்டர், கலை இலக்கிய மாநில துணை தலைவர் ஆலடி சங்கரையர மாவட்ட துணை தலைவர் பொன்னுசாமி, நகர பொது செயலாளர் அருமைநாயகம், நகர துணை பொது செயளாலர் யோகம் ராஜா, நகர துணை தலைவர் M. ஜோசப்பு மற்றும் பிரதாப், பிரகாஷ் , குமரன், காசி பெருமாள், மகாராஜா, பாலகிருஷ்ணன், தாமஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.   

Friday, 7 December 2018

ம. தி,தா பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா

நெல்லை சந்திப்பில் ம தி தா பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா
விஜிலா சத்தியானந்த் எம்.பி பங்கேற்பு
நெல்லை டிச 8    நெல்லை சந்திப்பு   மதிதா இந்துக்கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடந்தது. இவ்விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் வேல்முருகன்  வரவேற்றார். பள்ளிக் கல்வி சங்க  தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக விஜிலா சத்தியானந்த் எம்.பி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, +1  மாணவர்களுக்கு 189 பேர்க்கும், மாணவிகள் 59 பேர்க்கும் +2 மாணவர்கள் 161 பேர்க்கும் மாணவிகள் 42 பேர்க்கும் ஆக மொத்தம்  451 பேர் க்கு  விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகர  அவைத் தலைவர் பரணி சங்கரலிங்கம் , தச்சை மண்டல முன்னாள் தலைவர் தச்சைமாதவன், ஹயாத், கிருஷ்ணமூர்த்தி , மின்வாரிய தொழிற்சங்க   நிர்வாகி கருப்பசாமி, மோகன் , படப்பை சுந்தரம், திருத்து சின்னத்துரை , வக்கீல் ஜெனி,  சி.பா, முருகன்.
தச்சை மணி, பள்ளிக் கல்வி சங்க பொருளாளர் சிதம்பரம், பள்ளிக் கல்வி சங்க ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் சுரேஷ், ஏ.எல்.எஸ் சண்முகம், ஆகியோர் கலந்து கொண்டனர். விழா முடிவில் பள்ளித் முதுநிலை ஆசிரியர்   ராஜேந்திரன் நன்றி கூறினார்.

கண்ணே நலமா? கருத்தரங்கம் மூத்த செய்தியாளா் ஹஸன் சிறப்புரை



நெல்லை. டிச. -7-
திருநெல்வேலி மாவட்டம், சேரன் மகாதேவி வட்டம், "கோபாலசமுத்திரம்" பகுதியில் அமைந்துள்ள, 108 ஆண்டுகள்,"பழைமை" வாய்ந்த,"பண்ணை வெங்கடராமய்யர் உயர் நிலைப்பள்ளி"யில், ,"வாசன் ஐ கேர்" மருத்துவமனையின், "இலவச கண் சிகிச்சை" முகாமினை,  "மூத்த பத்திரிக்கையாளர்" நாவலர்,அல்ஹாஜ். Rtn.TSMO.ஹஸன், துவக்கி வைத்தாா்.
         முன்னதாக நடைபெற்ற, "சிறப்பு"கருத்தரங்கில், "கண்ணே நலமா?" என்னும் தலைப்பில், ஹஸன் உரையாற்றினாா்.   தலைமை ஆசிரியை. .ரேவதி லெட்சுமி, அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தமிழ் ஆசிரியர். ராமலிங்கம், நன்றி கூறினார்.
சுமார் 600  போ்  இந்த முகாமில் பங்கேற்று, பயன் பெற்றனர்.


Thursday, 6 December 2018

ஆலங்குளத்தில் காங் அலுவலகம் திறப்பு ்அம்பேத்கா் நினைவுநாள் அனுசாிப்பு





நெல்லை, டிச.6
நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் வட்டார காங்கிரஸ் அலுவலகம் திறப்பு விழா மற்றும் அம்பேத்கா் நினைவுநாள்  அனுசாிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நெல்லை பாராளுமன்ற முன்னாள் உறுப்பினா் ராமசுப்பு புதிய அலுவலகத்தை திறந்து வைத்தாா். மாவட்ட செயலாளா் சிவக்குமாா், மற்றும் கட்சி நிா்வாகிகள்
தங்கசெல்வம், ஆலடி சங்கரய்யா, அலெக்சாண்டா், வக்கீல்  பால்ராஜ், அருமை நாயகம், ரூபன் உள்பட பலா் கலந்து கொண்டனா். காங்கிரஸ் அலுவலகத்தில் அம்பேத்கா் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மாியாதை செலுத்தினா்.

Wednesday, 5 December 2018

கஜா புயலுக்கு மேலப்பாளையம் பள்ளிகள் சாா்பில் நிவாரணம்


    நெல்லை. டிச. 6
        கஜா புயல்" தாக்கத்தினால், வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் காவேரி டெல்டா" மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு திருநெல்வேலி மாவட்டம்,  மேலப்பாளையத்தில் உள்ள,"முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி" மற்றும் "கோல்டன் ஜுபிளி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி" சார்பில், சுமார் 2 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, "நிவாரணப் பொருட்கள், 4 வாகனங்களில், அனுப்பி வைக்கப்பட்டன.
    நெல்லை மாநகர காவல், துணை ஆணையர்.  கு. சுகுணா சிங் மாணவ-மாணவிகள்,ஆசிரியா்கள் மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில், "பச்சைக்கொடி" அசைத்து,   வாகனங்களை வழி அனுப்பி, வைத்தார்கள்.
     இந்த  நிகழ்ச்சியில்,"முஸ்லிம் கல்விக் கமிட்டி" துணைத்தலைவர். K.A.M.முகம்மது அலி அக்பர், பொருளாளர். . T.S.M.O.அப்துல் மஜீத்,உறுப்பினர்கள்."மூத்த பத்திரிக்கையாளர்",.TSMO.ஹஸன்,  L.K.M.A.முகம்மது சலீம், .K.A.M.பக்கர்,அல்ஹாஜ். S.A.S.முகம்மது அலி ஜின்னா, முஸ்லிம் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர். . K.M.K.சேக் முகம்மது,உதவித் தலைமை ஆசிரியர்கள், . M.A.அப்துல் சமது,         K. M.கலந்தர் அப்துல் காதர், S.ஜமால் முகைதீன் மற்றும் கோல்டன் ஜுபிளி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர். .ராஜ. ஜெஸிந்தா மற்றும்  துணை முதல்வர். .ஸாஜிதா பாரூக் ஆகியோர், கலந்து கொண்டனர்.

கடையநல்லுாா் வட்டார வளமையத்தில் மாற்றுத்திறனாளிகள் தினவிழா கோலாகலம்


மாணவ மாணவிகளின் கண்கவா் கலை நிகழ்ச்சிகள் 


வட்டார வளமைய மேற்பாா்வையாளா் பெருமாள் (பொ) பாிசு வழங்கிய காட்சி Add caption


கடையநல்லுாா் கல்வி வட்டார வளமையத்தில் 
 மாற்றுத் திறனாளிகள்  தின விழாவின் போது எடுத்த புகைப்படங்கள்Add caption

கடையநல்லுாா் வட்டார வளமையத்தில் மாற்றுத்திறனாளிகள் தினவிழா கோலாகலம்
நெல்லை. டிச.5-
     நெல்லை மாவட்டம் கடையநல்லுாா் கல்வி வட்டார வளமையத்தில்
மாற்றுத்திறனாளிகள் தின விழா கோலாகலமாக நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலா் தலைமை தாங்கினாா். வட்டார வளமையம்
மேற்பாா்வையாளா் பெருமாள் (பொ) முன்னிலை வகித்தாா்.
மாணவ மாணவிகளுக்கு பல்வேறு விளையாட் போட்டிகள்
நடைபெற்றது. கண்கவா் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விளையாட்டு போட்டிகளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிாியை தொடங்கி வைத்தாா்.
     போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாிசு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. கடையநல்லுாா் பெண்கள்
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிாியா் பாிசு வழங்கி பாராட்டினாா். விழாவிற்கான ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளா்  மாாியப்பன் ஆசிாியா் பயிற்றுநா்கள்  மற்றும் சிறப்பாசிாியா்கள் செய்திருந்தனா்.

நெல்லை அ.ம.மு.க சாா்பில் அம்மாவுக்கு அஞ்சலி


செய்தி படம் கொம்பன் ராஜா
நெல்லை. டிச. 5
    மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா 2ம ஆண்டு நினைவு தினத்தையொட்டி நெல்லை சந்திப்பு கூட்டுறவு அங்காடி அருகே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் முன்னாள் துணை மேயா் ஜெகநாதன்
தலைமையில் நத்தம பேச்சி பாண்டியன். வா்த்தக அணி சுந்தா் ராஜன். கமாண்டோ சுப்பிரமணியன், விஎம் சத்திரம் காா்திக்  உள்பட கட்சி நிா்வாகிகள் பலா் அஞ்சலி செலுத்தினா்.

இராதாபுரத்தில் அம்மா நினைவுநாள்

         நெல்லை. டிச.5
  இராதாபுரம் ஒன்றிய இளைஞர் அணி சார்பில் மாண்புமிகு அம்மா அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் அனுஷ்டிக்கப்பட்டது இராதாபுரம் நான்குநேரி தாலுகாக்கள் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் இராதாபுரம் எஸ்.முருகேசன், இராதாபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் எம்.மதன் மற்றும் ஒன்றிய எம்.ஜி .ஆர் மன்ற தலைவர் ராமர் நாடார், கிளைகழக செயலார் ஐயப்பன், பந்தல் இசக்கியப்பன் பாசறை கிளை செயலார் லோகிஸ்வர மூர்த்தி , பாலசுப்பிரமணியம், முத்துகுமார், செல்வம், முத்து, சுயம்பு நாடார், லான் ட்ரி ஜெயக்குமார், சண்முகவேல் கோணார், மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் ஆகியோர் பெரும்திரளாக கலந்துகொண்டு தெய்வதிருமிகு .அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

நெல்லை மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் மாியாதை

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிலதா நினைவு நாளையொட்டி நெல்லை மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் மாியாதை







செய்தி- படம்- கொம்பன் ராஜா
நெல்லை. டிச. 5-

    மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 2ம் ஆண்டு நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசாிக்கப்பட்டு வருகிறது.
நெல்லையில் மாநகர் மாவட் அதிமுக சாா்பில் கட்சியினா்  கொக்கிரகுளம் அருகே  அவை தலைவா் பரணி சங்கர லிங்கம் தலைமையில்  முன்னாள் பகுதி செயலளா்   காமராஜ் முன்னிலையில் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்தனா். ஜெயலலிதா உருவ படத்திற்கு  மாலை அணிவித்து மாியாதை செலுத்தினா். இந்நிகழ்ச்சியில்  பேரவை செயலாளா் ஜெரால்டு தச்சை மாதவன், வக்கீல் ஜெனி, பாலசுப்பிரமணியன்,   மன்மதராசா, மகளிரணி டாக்டா் கவிதா வெண்ணிலா ஜீவபாரதி,  வேலம்மாள்,  பேபி சுந்தா் மற்றும் அதிமுக நிா்வாகிகள் தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா். 

Tuesday, 4 December 2018

ஆலங்குளம் குடிநீர் குழாய்களில் உடைப்பு


ஆலங்குளம் சிறப்புநிலை பேரூராட்சியில் வழங்கப்படும் ஆற்றுத்தண்ணீர் குழாய்களில் அதிகமான உடைப்புகள் இருக்கிறது,
இதனால் வீடுகளுக்கு வழங்கப்படும் தண்ணீர் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது,
இதனால் பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது,
மேலும்  குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார்கள் மூலமாக குடிநீர் எடுப்பதாக பொதுமக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது,
இதுசம்பந்தமாக பேரூராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு பலமுறை நேரில் பொதுமக்கள் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை,
எனவே அனைத்து உடைப்புகளையும் சரிசெய்து தரமான குடிநீர் வழங்கவும்,
மின்மோட்டார்களை காவல்துறை உதவியோடு பறிமுதல் செய்து சீரான குடிநீர் வழங்கவும்  நடவடிக்கை எடுக்குமாறு மக்ஙள் கோரிக்கை வைத்துள்ளனர். 

ஆலங்குளத்தில் தொழில் தடை நீக்க தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை

ஆலங்குளம் பகுதியில் தொழிற்சாலைகள்,வர்த்தக நிறுவனங்கள் தொடங்குவதற்கு உள்ள தடைகளை நீக்க கோாிக்கை மனு வழங்கியபோது எடுத்த படம். 
 ஆலங்குளம். டிச. 4

       தமிழ்நாடு வணிகர் சங்ககளின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ எம் விக்கிரமராஜா, மாநில துணைத்தலைவர் ஆலங்குளம்  டி பி வி மல்டிப்ளெக்ஸ் திரையரங்கம் உரிமையாளர் வைகுண்டராஜா, மாநில இணைசெயலாளர் நட்ராஜ், மாவட்ட செய்தி தொடர்பாளர் பால்ராஜ், நெல்லை மாவட்ட தொழில்மையம் மேலாளர் முருகன் ஆகியோர் சென்னையில் தொழில் துறை மற்றும் வர்த்தகதுறை முதன்மை செயலாளர்  டாக்டர் ராஜேந்திரகுமார் ஐ.ஏ.எஸ் இடம் கோாிக்கை மனு வழங்கினா்.
   அந்த மனுவில்........
       திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் தொழிற்சாலைகள்,வர்த்தக நிறுவனங்கள் தொடங்குவதற்கு உள்ள தடைகளை நீக்க வேண்டும். 
    ஆலங்குளம் மற்றும் ஆலங்குளம் தாலுகாவை சுற்றியுள்ள ஊர்களில் அரிசி ஆலைகள் எண்ணெய் ஆலைகள் டால் ஆலைகள் என பல ஆலைகள் இருந்து வருகின்றன தற்போது புதியதாக தொழிற்சாலைகளை மேம்படுத்தி நவீனமயமாக முற்படும்போது கீழ்கண்ட பல தடைகள் ஏற்படுகின்றன
     புதிய தொழில்சாலைகள் தொடங்குவதற்கு நகர ஊரமைப்பில் கட்டிட வரைபட அனுமதி கோரினால் ஆலங்குளம் மலை கிராமம் ஆதலால் தடையின்மை சான்று பெற சென்னையில்தான் அனுமதி பெற வேண்டும் என்கிறார்கள்.
      ஆலங்குளத்தை சுற்றிலும் 20 கிலோமீட்டர் சுற்றளவிற்கு மலைப்பிரதேசம் கிடையாது. 22.09.2016 தேதி கடிதப்படி ஆலங்குளம் பகுதி நகரமாகி உள்ளது
இதற்கான சான்றிதழ்களை இத்துடன் இணைத்துள்ளோம்.
   ஆலங்குளம் மலை பகுதி இல்லை எனவும் நகர ஊரமைப்பு அலுவலக அனுமதி வாங்குவதருக்கு விலக்கு அளித்து ஆண்டாண்டு காலமாக செய்வதுபோல் பஞ்சாயத்துகளில் ஒப்புதல் அளித்திட வேண்டுகிறோம் தனித்தனி கதவு எண் கொண்டு  தனித்தனி தொழில் செய்பவர்களையும் எச்..டி சர்வீஸ் வேண்டும் என புதிய நிபந்தனைகள் விதிக்கபடுகிறது.
  ஆலங்குளம் தற்போது நகர புறமாகவும் தாலுகாவாகவும் உள்ளதால் மலை பாதுகாப்பு மற்றும் மண் பாதுகாப்பு இனங்கள் எதுவும் கிடையாது என்பதையும் தெரிவித்து கொள்கிறோம். தனித்தனி கட்டிடங்களில் தனித்தனி தொழில் செய்ய எல்.டி சர்வீஸ் தந்திடவேண்டுகிறோம்.
     தற்போது 150 எச்..பி வரையில் உள்ள மின் இணைப்புகளுக்கு எல்.டி சர்வீஸ் கொடுக்கபடுகிறது ஆனால் அந்த திறன் தொழில் சாலைகளுக்கு மிகவும் குறைவாக உள்ளதால் 250 எச்.பி முதல் 300 எச்..பி வரையில் எல்.டி சர்வீஸ் இணைப்பு தந்திட ஆவணை செய்ய வேண்டும்
    ஆலங்குளம் கிராமத்தை மலை கிராம பகுதியில் இருந்து விலக்கு அளித்து மாசுக்கட்டுப்பாடு வாரியம் அனுமதி எளிதாக கிடைக்க அனுமதி வழங்கவேண்டும்.
      புதிதாக தொழில் தொடங்குவோர்  மகிழ்ச்சியாக தொழில்கள் செய்து பல ஆயிரகணக்கானோா்ர் குடும்பங்கள் வாழ்த்தவதருக்கு நன்றாக இருக்கும் என்று கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.  

நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் கஜா புயல் நிவாரணம்

நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக கஜா புயல் நிவாரணப் பொருட்களை தமிழ் நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் அவர்களிடம் நெல்லை மாநகர மாவட்ட தலைவர் K.சங்கரபாண்டியன் அவர்கள் இன்று (04-12-2018) திருச்சியில் காலை 10 மணி அளவில் வழங்கிய போது. உடன் மாநகர மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், பொது செயலாளர் சொக்கலிங்க குமார், தச்சை மண்டல தலைவர் தனசிங்பாண்டியன்,மாநில செய்தி தொடர்பாளர் பெனட் அந்தோனி,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்...

Monday, 3 December 2018

கஜா புயல் பாதிப்பு ரூ 1 லட்சம் நிவாரண நிதி

                                       
                           கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள, "டெல்டா"மாவட்ட மக்களுக்கு உதவிடுவதற்காக, பாளையங்கோட்டை, "மிலிட்டரி லைன்" பள்ளிவாசல் ஜமாத் சார்பில்,அதன் நிர்வாகிகள், நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர். திருமதி. ஷில்பா பிரபாகர் சதீஷ் அவர்களிடம், ரூபாய் ஒரு லட்சத்துக்கான, காசோலையை, இன்று (3-12-2018) திங்கட்கிழமை காலையில்,நேரில், ஒப்படைத்த போது, எடுத்த படங்கள்."மூத்த பத்திரிக்கையாளர்", நாவலர்,அல்ஹாஜ். Rtn.TSMO.ஹஸன், அப்போது, உடனிருந்தார்.

நெல்லையில் மாற்றுத்திறனாளிகள் தின பேரணி

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி நெல்லை பாளை வஉசி மைதானத்தில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தொடங்கி வைத்தார்.