Tuesday, 29 August 2017

நெல்லை அரவிந்தில் தேசிய க்ண்தான விழா




தேசிய கண்தான இருவார விழா நெல்லை அரவிந்த் கண்மருத்துவமனையில்

    ரோட்டரி அரவிந்த் கண் வங்கி, அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து 32 வது  தேசிய கண்தான இருவார விழா நடைபெற்றது. தலைமை கண் மருத்து அதிகாரி டாக்டர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். திருநெல்வேலி சரக காவல் ஆணையர் கபில் குமார் சராட்கர் கண்காட்சியை தொடங்கி வைத்தார். கருவிழி பிரிவு தலைமை மருத்துவர் அனிதா வரவேற்றார். விழாவில் அரவிந்த் கண்மருத்துவ மனை மருத்துவர்கள் ஊழியர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர். 

பேராயர் அறிவர் கால்டுவெல் நினைவேந்தல் கருத்தரங்கம்

பேராயர் அறிவர் கால்டுவெல் நினைவேந்தல் கருத்தரங்கம் பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்றது. மொழிவளர்ச்சி சமூக விடுதலை சமயப்பணிகள் குறித்து கருத்துரை வழங்கினர். விழாவிற்கு அவ்வை நுண்கலை கல்லூரி தாளாளர் ஓவியர் சந்துரு தலைமை தாங்கினார். டிடிடிஏ தொடர்புத்துறை இயக்குநர் கிப்சன் ஜான்தாஸ் வரவேற்றார்.
     நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் பாஸ்கர், பதிவாளர் ஜான் டி பிரிட்டோ,  சாமி தோப்பு அய்யாவழி தவத்திரு பாலபிரஜாபதி அடிகளார், பாளை கத்தோலிக்க மறை மாவட்ட முதன்மை குரு சேவியர் டெரன்ஸ், டிடிடிஏ திருமண்டலம் உபதலைவர் பில்லி, திருமண்டல செயலர் ஸ்டீபன் செல்வின் ராஜ், பாராளுமன்ற மேலவை உறுப்பினர் விஜிலா சத்யானந்த்,
    இந்திய தொல்லியல் துறை ஆணையர் அறவாழி, எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, பேராசிரியர் எம்எஸ் தங்கம், தூயயோவன் கல்லூரி முதல்வர் ஜான் கென்னடி வேதநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    விழாவில் முன்னதாக குத்துவிளக்கு ஏற்றப்பட்டது. கார்டுவெல் மார்பளவு சிலை, டாக்டர் கால்டுவெல் வாழ்வும் பணியும் என்ற நூல் வெளியிடப்பட்டது. பள்ளி கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.


நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் வீடியோ காட்சிகளை உங்களுக்காக பதிவிடுகிறோம். நெல்லை நியூஸ் போஸ்ட் யூ டியூப் சேனலில்.............
my whats app number: 9444345132
To Promote your own Videos Contact : malarvimalesh@gmail.com
இணைந்திருங்கள்  nellai newspost உடன்  subscribe செய்ய மறந்துவிடாதீா்கள்

Friday, 11 August 2017

நெல்லையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்.





நீட் தேர்வு முறையில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி நெல்லையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்.

     கிராமப்புற ஏழை மாணவர்களை பாதிக்கும் மருத்துவ கல்வி படிப்பில் நீ;ட் தேர்வு முறையில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாளை ஜவஹர் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் நாஞ்சை ரவி தேவேந்திரன் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட தலைவர் பொட்டல் கண்ணன், மகளிரணி செயலாளர் ராதிகா மதன், மாவட்ட தலைவர் மஞ்சுளா முன்னிலை வகித்தனர். கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் சண்முக சுதாகர் தென்மண்டல செயலாளர் அழகர் சாமி கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். மாவட்ட இணை செயலாளர் சிவக்குமார் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Thursday, 10 August 2017

மமக கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம்- தாழையூத்தில்


மதுக்கடை திறப்பை கண்டித்து மமக கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

 நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வந்த மதுக்கடைகளை மூடிட  உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் பின்னணியில் நெல்லை மாவட்டத்தில் மூடப்பட்ட பல மதுபான கடைகள் வழிபாட்டு தலங்கள்,கல்விநிலையங்கள் மற்றும் போக்குவரத்திற்கு ஆகியவற்றிற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் புதிதாக அமைக்கப்படுகின்றன.

   அந்த வரிசையில் தாழையூத்து அருகில்,ஏ.எப் குவாரி குடியிருப்பு அருகில் மதுபானகடை
அமைக்க  மாவட்ட நிர்வாகம் உத்தேசித்துள்ள டாஸ்மாக் கடை அருகிலுள்ள குடியிருப்பு மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளதோடு அதன்  அருகாமையில் அமைந்துள்ளது.பள்ளியின் மாணவ மாணவியருக்கு பெரும் சோதனையாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

   இது குறித்து மாவட்ட  ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டும் மக்களின்  உணர்வுகளுக்கு எவ்வித மதிப்பும் அளிக்காமல் அரசு தனது வருமானம் மற்றும் மதுபான கூடம்  நடத்தும் தனிநபரின் வருமானத்தை பற்றிய அக்கறையுடன் மதுபான கடையை திறக்க முற்படும் செயலை கண்டிக்குமுகமாக மமக மானூர் ஒன்றிய செயலாளர் சாகுல் ஹமீது தலைமையில் ஆர்ப்பாட்டம் தாழையூத்து மின்வாரிய  அலுவலகம் அருகே நடைபெற்றது.

   கிளை செயலாளர் சாகுல் அமீது வரவேற்றார்.மாவட்ட பொறுப்புகுழு உறுப்பினர் டவுண் ஜமால் மற்றும் பேட்டை சேக் ஆர்பாட்டத்தை துவக்கி வைத்தனர்.கோரிக்கைகளை வலியுறுத்தி மமக மாவட்ட பொறுப்புகுழு தலைவர் உஸ்மான் கான் சிறப்புரை ஆற்றினார்.மாவட்ட  அணி நிர்வாகிகள் பாளை செய்யது அலி, அபுபக்கர் அல்தாபி. டவுண் ரசூல், கம்புகடை சுல்தான் டவுண் ஜாபர். ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில்  திரளாக கலந்து கொண்ட பெண்கள் கோரிக்கை குறித்து கோசங்களை எழுப்பினர்.இறுதியாக தமுமுக கிளை செயலாளர் மன்சூர் நன்றி கூறினார்

Saturday, 5 August 2017

நெல்லை திமுக இலக்கிய அணி விழா

நெல்லை மத்திய மாவட்டம் மாவட்ட மாநகர இலக்கிய அணி சார்பாக அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பெயரில் பாடல் ஒப்புவித்தல் மற்றும் பேச்சு போட்டி திருநெல்வேலி சந்திப்பு ம.தி.தா இந்து மேல் நிலை பள்ளியில் நடைபெற்றது அதனை நெல்லை மத்திய மாவட்ட கழக செயலாளர் திருமிகு மு.அப்துல்வஹாப் அவர்கள் துவக்கி வைத்தார் இதில் நெல்லை சட்ட மன்ற உறுப்பினரும் மாநகர செயலாளருமான திரு A.L.S லெட்சுமணன் தலைமை செயற்குழு உறுப்பினர் பேச்சி பாண்டியன் மற்றும் கழக முன்னனியினர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியை மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் T.A.K கொம்பையா பாண்டியன் தலைமை தாங்கினார் மாநகர அமைப்பாளர் வக்கில் A. நவஷாத் மாவட்ட துனை அமைப்பாளர் கவிஞர் மூர்த்தி வரவேற்று பேசினார் நிகழ்ச்சியில் இலக்கிய அணி நிர்வாகிகள் பாலன்( எ) ராஜா இலக்கிய அணி தலைவர் கவிஞர் குமார சுப்பிரமணியன் நெல்லை முத்தையா மாநகர துனை அமைப்பாளர் சங்கரலிங்கம் பாம்பு கிருஷ்ணன் நெல்லை ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்

Wednesday, 2 August 2017

நெல்லை மேற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம்

     நெல்லை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்  மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன் தலைமையில் நடந்தது. மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் வல்லம் செல்லத்துரை கொட்டாகுளம் கோமதிநாயகம் மாவட்ட பொருளாளர் வடகரை கனல் காஜா சுப்பிரமணியன் திருமலைச்சாமி டைட்டஸ் ஆதித்தன் வாசு முத்துச்சாமி பரமகுரு ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்
     மாவட்ட அமைப்பாளர் கோ. சுப்பையா வரவேற்றார் அணி தலைவர் சுப்பையா பாண்டியன் தொகுத்து வழங்கினார். நிசழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரசாக் அவைத் தலைவர் முத்துப்பாண்டி நகர செயலாளர் சாதீர் ஊத்து மலை இளையராஜா சுப்பிரமணிய பாண்டியன் குற்றாலம் மந்திரம் சாமிதுரை காதர் அண்ணாவி யோவான் மாவட்ட பிரதிநிதிகள் பேச்சிமுத்து, சங்கர் ராமராஜ் வடகரை ராமர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர் முடிவில் மாவட்ட துணை அமைப்பாளர் ஆயிரப் பேரிமுத்துவேல் நன்றி கூறினார்
    கூட்டத்தில் அதிமுக ஆட்சியில்  பல்வேறு ஊழல்களை சட்டமன்றத்தில் பேசி  மக்கள் மன்றத்திற்கு எடுத்துக் காட்டிய திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி.

        பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பாவேந்தர் பாரதிதான் பாடல் கவிதை ஒப்புவித்தல் போட்டியை வருகிற 13.08 2017 ஞாயிற்றுக்கிழமை மேலகரம் சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
       குற்றாலத்தில் அமைந்துள்ள பூங்காவில் வரலாற்று சிறப்பு மிகு ஓவியங்கள்  திமுக தலைவா்  கலைஞர் ஆட்சி காலத்தில் வரையப்பட்டிருந்தது சீசனுக்கு வரும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் கண்டு களித்து வந்தனர் ஆனால் தற்போதைய எடப்பாடி அரசு அதனை அழித்து விட்டனர் இதனை இக் கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
     தமிழகத்தில் நிலவும் வரலாறு காணாத வறட்சியின் காரணமாக விவசாய பெருங்குடி மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆழாகி தனது வாழ்வாதாரங்களை இழந்து தவித்து கொண்டிருக்கும் நிலை யில் மத்திய மாநில அரசுகள் விவசாயிகளை வஞ்சிப்பதோடு விவசாயிகளின் நிலயை கண்டு கொள்ளாததை  இக் கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது
       வருகிற 10 மற்றும் 11ம் தேதியில் சென்னைய்ல நடைபெறுகிற முரசொலி பவள விழா நிகழ்ச்சிக்கு இலக்கிய அணி சார்பில் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்ய பட்டது

மராட்டிய மன்னா்கள் காலத்தில் தோன்றிய பொய்க்கால் குதிரை

Tuesday, 1 August 2017

ஆலங்குளம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு பள்ளிமாணவன் பலி

ஆலங்குளம் அருகே டெங்கு காய்சலுக்கு பள்ளி மாணவர் பலி. ஆலங்குளம் அருகே உள்ள  குறிப்பன்குளம் இசக்கி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகம். விவசாயி. இவருடைய மகன் முத்துவேல் ராஜன் (16). நல்லுர் மேற்கு திருநெல்வேலி மேல்நிலை பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக டெங்கு காய்சலால் பாதிக்கபட்ட இவர் பாளை அரசு மனையில் நேற்று மாலை சிகிச்சை பலனளிக்காமல் பலியானார். இவருக்கு 5 சகோதரிகள் உள்ளனர். தாய் பாக்யலட்சுமி.