Wednesday, 30 January 2019

நெல்லையப்பா் கோவிலை சுற்றியுள்ள கடைகள் அகற்ற கால அவகாசம்- அமைச்சாிடம் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு கோாிக்கை

நெல்லை. ஜன. 30-

திருநெல்வேலி டவுன் நெல்லையப்பர் கோவிலை சுற்றியுள்ள கடைகளை உடனடியாக அகற்ற மாநகராட்சியின் சார்பில்  நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் A.M.விக்கிரமராஜா, துணைத்தலைவர் T.P.V.வைகுண்டராஜா, பொருளாளர் M.சதக்கப்துல்லா, திருநெல்வேலி மாநகர தலைவர் M.R.குணசேகரன், நெல்லை மத்திய மண்டல செயலாளர் விநாயகம் ஆகியோர் தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் S.ராமசந்திரன் சந்தித்து மனு அளித்தனர்.
பேரமைப்பின் கோரிக்கையை உடனடியாக ஏற்ற அமைச்சர் வணிகர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும் என  உறுதியளித்தார். மேலும் மாற்று இடம் வழங்கப்படும் வரை வணிகர்கள் தங்கள் கடைகளில் வணிகம் செய்துகொள்ளவும் அனுமதி அளித்துள்ளார்.


Monday, 28 January 2019

ஆலங்குளம் ஜீவா மாண்டிச்சோாி பள்ளியில் 11 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

     ஆலங்குளம்- ஜன- 28
    நெல்லை மாவட்டம் ஆலங்குளம் ஸ்ரீராம் நகா் ஜீவா மாண்டிச்சோாி மெட்ாிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் 11 வது ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வி
சேவை நிறுவனத்தின் துணை இயக்குநா் ஜெயராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்வி விளையாட்டு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவ மாணவிகளுக்கு பாிசு வழங்கி பாராட்டி பேசினாா்.
  விழாவிற்கு பள்ளி தாளாளா் இராதா தலைமை தாங்கினாா். பள்ளி முதல்வா் ஏஞ்சல் பொன்ராஜ் வரவேற்றாா். மாணவ மாணவிகளின் கண்கவா் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.



ஆலங்குளம் ஜீவா மாண்டிச்சோாி பள்ளியில் 11 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

Tuesday, 22 January 2019

ஆலங்குளம் காவல் நிலையத்தில் இறகுப்பந்து விளையாட்டு மைதானம் திறப்பு விழா


        
     


 ஆலங்குளம் காவல் நிலையத்தில் இறகுப்பந்து விளையாட்டு மைதானம் திறப்பு விழா நடைபெற்றது.
               ஆலங்குளம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு பணிச்சுமை மற்றும் மனரீதியாக பாதிக்கபடாத வண்ணம் காவல் நிலையம் அருகிலேயே அவர்கள் விளையாடுவதற்காக இறகுப்பந்து மைதானம் திறப்பு விழா நடைபெற்றது.இந்த விழாவிற்கு ஆலங்குளம் காவல் ஆய்வாளர் ஐயப்பன் தலைமை தாங்கி மைதானத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
    உதவி காவல் ஆய்வாளர் விஜய் சண்முகநாதன் முன்னிலை வைத்தார்.விஜய் டிவி புகழ் திருநங்கை 'இப்படிக்கு ரோஸ்' சிறப்பு விருந்தினராக பங்கேற்று விழாவினை சிறப்பித்தார். மேலும் காவலர்களுக்கான உடற்பயிற்சி கூடத்தை உதவி காவல் ஆய்வாளர் விஜய் சண்முகநாதன் திறந்து வைத்தார்.விழாவில் உதவி ஆய்வாளர் சுரேஷ்,சிறப்பு உதவி ஆய்வாளர் மாரியப்பன், எழுத்தர்கள் ஜான்சன்,ஜெயபால்  காவலர்கள் கிருஷ்ணகுமார், ஆனந்த், சூர்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Friday, 4 January 2019

செல்லப்பாண்டியன் சிலைக்கு காங்கிரஸ் மரியாதை

நெல்லை ஜன- 4                                          முன்னாள் சபாநாயகர் செல்லபாண்டியன் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் K.சங்கரபாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட தலைவர் SKM.சிவகுமார் மேற்கு மாவட்ட பொருளாளர் SP. முரளிராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினர்   பொன் ராஜேந்திரன், மாநில சிறுபான்மை துறை ஒருங்கிணைப்பாளர் P.ஷேக் நாகூர்கனி, மாவட்ட துணை தலைவர் வண்ணை சுப்பிரமணியன், வெள்ளை பாண்டியன், முத்துகிருஷ்ணன், பொதுச் செயலாளர்கள் A.சொக்கலிங்க குமார், M.சபிக், ராஜா சரவணன், மண்டல தலைவர்கள் SS.மாரியப்பன், A.தனசிங் பாண்டியன், மாவட்ட மகளிரணி தலைவி A.மாரியம்மாள், மாவட்ட சிறுபான்மை தலைவர் S.முஹம்மது அனஸ் ராஜா, பட்டதாரி தலைவர் சாம் ஆரோன், சேவாதள மயில்ராவணன், மாவட்ட நிர்வாகிகள் ரயில்வே கிருஷ்ணன், M.செய்து இப்ராஹீம் நசீர், அப்துல் ஜலீல், சிவன் பாண்டியன், ரயில்வே கிருஷ்ணன், நூருல் ஹக், வண்ணை சாம், மானூர் ஆபிரகாம், ஐயாதுரை பாண்டியன், சண்முகவேல், நந்தகோபால், சுந்தர்ராஜ், மகளிரணி அனீஸ் பாத்திமா, மேடால்ட, இசக்கிஅம்மாள், இமானுவேல், செல்வகுமார், தச்சை  மாறி கண்ணன், மானூர் வட்டார தலைவர் சொர்ணம், துரை பீட்டர், ஹைதர் அலி மற்றும் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Thursday, 3 January 2019

கட்டபொம்மன் பிறந்தநாள் காங்கிரஸ் மரியாதை

 நெல்லை ஜன-3
வெள்ளையன் எதிர்த்து போரிட்ட மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பாளை பஸ் நிலையத்தில் அருகில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் K.சங்கரபாண்டியன் கிழக்கு மாவட்ட தலைவர் SKM.சிவகுமார் ஆகியோர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் S.ராஜேஷ் முருகன், மாவட்ட துணைத் தலைவர் வண்ணை சுப்பிரமணியன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் A.சொக்கலிங்க குமார், M.சபீக், மனோகரன், ரயில்வே கிருஷ்ணன், ராஜ் சரவணன், மண்டல தலைவர்கள் SS.மாரியப்பன், தனசிங் பாண்டியன், மாவட்ட நிர்வாகிகள் சயீத் இப்ராஹீம் நசீர், அப்துல் ஜலீல், சிரஞ்சீவி, மயில்ராவணன், கிழக்கு மாவட்ட விவசாய அணி சிவன் பாண்டியன், மானூர் ஆபிரகாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.