Thursday, 18 October 2018

குருவன் கோட்டையில் இடிந்து விழும் அபாய நிலையில் ரேசன் கடை

     
 ஆலங்குளம் அருகே குருவன்கோட்டையில் உள்ள நியாய விலைக்கடை  இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதால் மாற்று கட்டிடம் வேண்டி கடை ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 



                 குருவன்கோட்டை கிராமத்தில் உள்ள இந்த நியாய விலைக்கடை, கடந்த 2000 ஆம் ஆண்டு ஆலடி அருணா சட்டத்துறை அமைச்சராக இருந்த போது, திறந்து வைக்கப்பட்டது. அன்று முதல் செயல்பட்டு வரும் இக்கடையில் 1364 அட்டைதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கடையின் கட்டடம் மேல்பகுதி, தரைத்தளம், மற்றும் சுற்றுப்புற சுவர்கள் மிகவும் பழுதடைந்து எப்போது எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இது தொடர்பாக கிராம மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தும் தீர்வு காணப்படவில்லை என கூறபடுகிறது. மேலும் கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களான நாகபட்டினத்தை சேர்ந்த எடை அலுவலர் ராஜேந்திரன்(53) மற்றும் திருவாரூரை சேர்ந்த பட்டியல் எழுத்தர் அன்பழகன்(48) ஆகியோர் மாற்று கட்டிடம் வேண்டி'தங்களது உயரதிகாரிகளிடம் பலமுறை இதுகுறித்து முறையிட்டுள்ளனர்.ஆனால் மாற்று கட்டிடத்திற்கு தீர்வு ஏற்படவில்லை.
    மழை நேரம் என்பதால் கட்டிடம் நீரை உறிஞ்சி இடிந்து விழும் நிலையில் உள்ளது.மேலும் ரேசன் பொருள்கள் வாங்க வரும் பொதுமக்கள் தலையிலும் மேற்கூரை பெயர்ந்து காயத்தை ஏற்படுத்தி வருகிறது.எனவே சிறிய அதிர்வைக் கூட தாங்க இயலாத இக்கட்டடத்தை பெரிய விபத்து ஏதும் நிகழும் முன்பாக மாற்ற வேண்டும் என்று கடை ஊழியா்கள் பொதுமக்கள் கோாிக்கை வைத்துள்ளனா்.   

Monday, 8 October 2018

சிறுபான்மையின மாணவ-மாணவியர்களுக்கு பள்ளி கல்வி உதவித் தொகை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு


     தமிழ் நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 1-ம் வகுப்பு முதல் பி.எச்.டி வரை பயிலும் மைய அரசால் அறிவிக்கப்பட்ட சிறுபான்மையினரான கிறித்துவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர்,
பார்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சார்ந்த சிறுபான்மையின மாணவஃமாணவியர்களுக்கு 2018-19 ஆம் ஆண்டிற்கு பள்ளிப் படிப்பு மற்றும் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை (புதுப்பித்தல் மற்றும் புதியது) விண்ணப்பிக்க 30.09.2018 வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
      தற்போது பள்ளி படிப்பு கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க
15.10.2018 வரையும் பள்ளி மேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க 31.10.2018 வரையும் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
     1-ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரைக்கான பள்ளி படிப்பு மற்றும் 11ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கான பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகைக்கான புதியது ஃபுதிப்பித்தலுக்கான விண்ணப்பங்களை மாணவஃமாணவியர் www.scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ்  தெரிவித்துள்ளார்.

Wednesday, 3 October 2018

நெல்லை ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு எஸ்டிபிஐ போராட்டம்

நெல்லை
நெல்லை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு எஸ்டிபிஐ கட்சியினா்  திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகா் சதுாா்த்தி ஊா்வலத்தின் போது இருதரப்பினா் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடா்பாக செங்கோட்டை போலீசாா் இருதரப்பினா் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனா். இந்த நிலையில் செங்கோட்டை பிரச்னை தொடா்பாக கைது செய்யப்பட்டுள்ள குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள எஸ்டிபிஐ கட்சியினா்  மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோாிக்கையை வலியுறுத்தி மாநில செயலாளா் அகமது நவ்வி தலைமையில் நெல்லை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு எஸ்டிபிஐ க்ட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். 

நடிகா் கருணாசை கைது செய்ய நெல்லை போலீஸ் தீவிரம்

நெல்லை,
ஜாமீனில் வெளிவந்த  நடிகா் கருணாசை கைது செய்ய நெல்லை
போலீஸ் தீவிரம் காட்டி வருகிறாா்கள்.
  சென்னை வள்ளுவா் கோட்டம் அருகே கடந்த செப்டம்பா் 16 தேதி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய    நடிகா் கருணாஸ் மீது போலீசாா் அவதுாறு வழக்கு பதிவு செய்து கைது செய்தனா். தற்போது ஜாமீனில் வெளிவந்த கருணாசை நெல்லை போலீசாா் கைது செய்ய  தீவிரம் காட்டி வருகின்றனா்.
    கடந்த 2017   செப்டம்பா் 1 ம் தேதி நெல்லை மாவட்டம் நெற்கட்டும் செவலில் நடைபெற்ற புலித்தேவன் பிறந்தநாள் விழாவில் மாலை அணிவிக்க கருணாஸ் வந்தபோது காா் உடைப்பு சம்பவம் நடைபெற்றது. இது தொடா்பாக
வழக்கு பதிவு செய்ய புளியங்குடி போலீசாா் தற்போது நடிகா் கருணாசை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனா்.