Monday, 8 October 2018

சிறுபான்மையின மாணவ-மாணவியர்களுக்கு பள்ளி கல்வி உதவித் தொகை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு


     தமிழ் நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 1-ம் வகுப்பு முதல் பி.எச்.டி வரை பயிலும் மைய அரசால் அறிவிக்கப்பட்ட சிறுபான்மையினரான கிறித்துவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர்,
பார்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சார்ந்த சிறுபான்மையின மாணவஃமாணவியர்களுக்கு 2018-19 ஆம் ஆண்டிற்கு பள்ளிப் படிப்பு மற்றும் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை (புதுப்பித்தல் மற்றும் புதியது) விண்ணப்பிக்க 30.09.2018 வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
      தற்போது பள்ளி படிப்பு கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க
15.10.2018 வரையும் பள்ளி மேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க 31.10.2018 வரையும் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
     1-ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரைக்கான பள்ளி படிப்பு மற்றும் 11ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கான பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகைக்கான புதியது ஃபுதிப்பித்தலுக்கான விண்ணப்பங்களை மாணவஃமாணவியர் www.scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ்  தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment