Monday, 27 November 2017

நெல்லையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வீரவணக்கம்


 நெல்லையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  சார்பில் தமிழீழ விடுதலைப் போரில் வீரமரணமடைந்த மாவீரர்களுக்கு வீரவணக்கநாள் நிகழ்ச்சி

தமிழீழ விடுதலைப் போரில் களப்பலியான விடுதலைப் புலிகளுக்கு வீரவணக்க நிகழ்ச்சியாக 1989 முதல் தேசியத் தலைவர் மே.த.கு.வே.பிரபாகரன் அவர்களால் உலகெங்கும் வாழும் தமிழர்களால் கடைபிடிக்கப்பட்டு வரும் நாளே  மாவீரர் நாளாகும் இந்நாளாகிய இன்று அதன் ஒருங்கிணைப்பாளர் தோழர் கண்மணிமாவீரன் தலைமையில் நடைபெற்றது
தமிழீழ விடுதலைப் போரில் வீரமரணம் அடைந்த விடுதலைப் புலிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது வீரவணக்கம் முழக்கம் ஏழுப்பப்பட்டது தமிழீழ தனிநாட்டு விடுதலைக்கு தொடர்ந்து துணை நிற்க சூளுரையும் எடுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தாமஸ்,.நடராசன்,.பிரவீன்,பெரியசாமி.
செந்தில், ஆறுமுகம்.,அலெக்ஸ்பாண்டியன் ,தியோன்,.ஜோசப்.,மாரிமுத்து. நயினார்,.ராஜா.,பெ.இளஞ்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்


Wednesday, 22 November 2017

ஆலங்குளத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

   
ஆலங்குளம் காங். ஆர்ப்பாட்டம் : -

 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ரேஷன் கடைகளில் நவம்பர் 1ம் தேதி முதல்  சர்க்கரை விலை உயர்வை கண்டித்து இன்று (22-11-2017) திமுக நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில்,  ஆலங்குளம் நகர காங்கிரஸ், நகர திமுக - இனைந்து ரேசன் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் ஏராளமான விலை உயர்வால் பாதிக்கப் பட்ட பெண்கள் ,  பொதுமக்கள் - தி மு க காங்கிரஸ் நிர்வாகிகள் காங்கிரஸ்  வழக்கறிஞர்  திரு.S.P.V.  பால்ராஜ், திரு', K.A . தங்க செல்வம், M.A.ஞானபிரகாஷ், (நகர தலைவர் காங் வர்த்தக பிரிவு) திமுக முன்னாள் நகர செயளாளர் பாப்புலர் செல்லதுரை , நகர செயளாளர் SPD.நெல்சன், ஒட்டுனர் அணி செயளாளர் S. அருள் மற்றும் தேசிய நெஞ்சங்கள் பலர் கலந்து கொண்டனர் பின்னர் அவர்களை போலிசார் கைது செய்து தனியார் கல்யாண மண்டபத்தில் அடைத்தனர். 

Tuesday, 21 November 2017

கந்து வட்டி கொடுமை பொதுவிசாரணை பரப்புரை

கந்துவட்டி கொடுமைகளால் பாதிக்கப்பட்டோருக்கான பொது விசாரணை பரப்புரை கலைப்பயணம்
கந்துவட்டி ஒழிப்பு கூட்டியக்கம் சார்பாக
நெல்லை மேலப்பாளைத்தில் துவங்கியது தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார் ,மாவட்ட செய்தி தொடர்பாளர் ஜமால், மாவட்ட மீனவரணி செயலாளர் தாமஸ், மாவட்ட பொருளாளர் சாந்தி ஜாபர், மாவட்ட மாணவரணி நயினார், மாவட்ட சட்டப் பிரிவு மாரிமுத்து, மாவட்ட பொறியாளர் அணி ராஜா, மாவட்ட துணை செயலாளர் சந்தை பேட்டை செய்யது, பாளை பகுதி இளைஞரணி ரஹ்மத்துல்லா, மேலப்பாளையம் பகுதி தலைவர் சரீப் அலி, பகுதி பொருளாளர் ஜின்னா,பகுதி இளைஞரணி சுலைமான், முஸ்தபா, சந்தைப்பேட்டை கிளைத் தலைவர் சேக் முகம்மது ஆகியோர் கலந்து கொண்டனர்