Sunday, 25 February 2018

நெல்லை காந்திநகர் லிட்டில் பிளவர் பள்ளியில் ; கனவு மெய்படவேண்டும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி



நெல்லை காந்திநகா் லிட்டில் பிளவா் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற விழாவின்போது எடுத்தபடம்.
நெல்லை, பிப். 24-
நெல்லை காந்திநகர் லிட்டில் பிளவர் பப்ளிக் பள்ளியில் கனவு மெய்பட வேண்டும் என்ற தலைப்பில் பெற்றோர்கள், பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தாளாளர் அண்டோ ஜோ செல்வக்குமார் தலைமை தாங்கினார். உளவியல் பேச்சாளர் டாக்டர் காயத்ரி, ஊக்கப்பேச்சாளர் பாரதி கிருஷ்ணகுமார் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பெற்றோர்கள், மாணவர்களுக்கு பயனுள்ள பல்வேறு கருத்துகளை பகிர்ந்தனர். சிறப்பு விருந்தினர்கள் பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் சார்பில் கவுரவிக்கப்பட்டனர். விழாவில் டாக்டர் மலர்விழி, ஜோஸ்வின் விமலா, தீபாசெல்வக்குமார், புதிய தலைமுறை தொலைக்காட்சி மேலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை லிட்டில் பிளவர் பப்ளிக் பள்ளி மற்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சியினர் செய்திருந்தனர்.



No comments:

Post a Comment