Saturday, 29 July 2017

ஆலங்குளத்தில் தினமணி நாளிதழ் -அரசு பள்ளி சாா்பில் அப்துல்கலாம் நினைவு தினம் பேரணி




ஆலங்குளத்தில் தினமணி நாளிதழ் - அரசு மேல்நிலைப்பள்ளி சாா்பில் நடைபெற்ற அப்துல்கலாம் நினைவு  பேரணி-          படங்கள் - சாலமோன் ஜெபராஜ்












ஆலங்குளத்தில் தினமணி நாளிதழ் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய கலாம் நினைவு  பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பேரணிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் கிறிஸ்டல் மேரி தலைமை வகித்தார். நகர வியாபாரிகள் சங்க செயலர் சின்னமணி முன்னிலை வகித்தார். சங்கத் தலைவர் கொடியசைத்து பேரணியைத் தொடங்கி வைத்தார். பள்ளி மாணவர்}மாணவிகள்  ஆலங்குளம் நகர முக்கிய வீதிகளில் கலாம் உருவப்படம், பொன்மொழிகள் தாங்கிய பதாகைகளை தாங்கியபடி  பேரணியாக சென்றனர். முன்னதாக பள்ளியில் கலாம் உருவப்படத்திற்கு ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் மாலை  அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பேரணியில் ஆசிரியர்கள் இந்திரா ரத்தினபாய், மதலின் ரீட்டா வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், ஆலங்குளம் பத்திாிகையாளா்கள் சிதம்பரம், சரவணன், அன்பழகன், சாலமோன் ஜெபராஜ், சாமுவேல் பாபு  உள்பட  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment