Friday, 15 June 2018

மஸ்ஜித் ஹுதா சார்பாக பெருநாள் தொழுகை

மஸ்ஜித் ஹுதா சார்பாக பெருநாள் தொழுகை


மேலப்பாளையம் விரிவாக்க பகுதியான கரீம் நகரில் மஸ்ஜித் ஹுதா சார்பாக அல் மதீனா சி. பி.எஸ்.சி பள்ளி திடலில் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது

மவ்லவி கே.எஸ்.சாகுல் ஹமீது உஸ்மானி தொழுகை நடத்தி பெருநாள் உரை நிகழ்தினர் , இதில் மஸ்ஜித் ஹுதா செயலாளர் ஜாபர் அலி, பொருளாளர் ஜவஹர், அல்ஹுதா ஷரியத் கல்லூரி முதல்வர் மீரான் முகைதீன், எஸ்.டி.பி.ஐ மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.ஏ.கனி, மாநில துணை தலைவர் நெல்லை முபாரக் உட்பட ஆண்கள், பெண்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்,

எஸ்.டி .பி .ஐ கட்சியின் மாநில துணைத்தலைவர்  நெல்லை முபாரக் தனது வாழ்துசெய்தியில்
“ஈதுல் ஃபித்ர்” எனும் ஈகை பெருநாளை - இன்பத் திருநாளை உவகையுடன் கொண்டாடும் இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த பெருநாள் நல்வாழ்த்துக்களை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.

வருடம் முழுவதும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் வாழ்வதற்கு மகத்தான பயிற்சியை தரும் மாண்புமிகு மாதமே ரமழான்.

திருக்குர்ஆன் இறக்கி அருளப்பட்ட இப்புனித மாதத்தில் எடுத்துக் கொண்ட முப்பது நாட்களின் பயிற்சி, வாழ்நாள் முழுவதும் பயன்தந்திட வாழ்த்துகிறேன்.

முப்பது நாட்கள் உண்ணாமல், பருகாமல், நோன்பிருந்து, இறைவனை விழித்திருந்து, தனித்திருந்து, இறைமறையை தினம் ஓதி, இல்லாதவருக்கு ஈந்து இறைவழிபாட்டில் முழுமையாக தன்னை ஈடுபடுத்தி அதன் இறுதியாக இன்பமுடன் கொண்டாடும் பெருநாளே ஈகைத்திருநாள். ரம்ஜான் பெருநாள்.

புத்தாடை அணிந்து, அறுசுவை உணவுகளை, உட்கொண்டு உற்றார் உறவுகளுடன் இன்பமுடன் இந்நாளில் மகிழ்வது போல், வாழ்நாள் முழுவதும் மகிழ்வுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்திக்கிறேன்.

வறியவர்களுக்கு உதவிடுவோம்! ஏழைகளின் கண்ணீரை துடைத்திடுவோம்! மதநல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையையும் காத்திடுவோம்! மத வெறியையும், மதவெறி சக்திகளையும் மாய்த்திடுவோம் என இந் நன்னாளில் நாம் அனைவரும் சபதமேற்போம்.